ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர், உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படை தளபதியை சந்தித்தார்

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர், ரியர் அட்மிரல் Angus Essenhigh, இன்று (2025 பெப்ரவரி 14) அட்மிரல் கான்சன பானகொடவை கடற்படைத் தலைமையகத்தில் உத்தியோகபூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

இதன்படி, இந்த உத்தியோகபூர்வ சந்திப்பில், ஐக்கிய இராச்சியத்திற்கும் இலங்கைக்கும் இடையிலான மூலோபாய நீர்வரைவியல் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துதல் உள்ளிட்ட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் தொடர்பாக அட்மிரல் மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர் இடையே கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றது.

மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திபிற்காக இலங்கை நீர்வரைவியல் அலுவலகத்தின் தலைவர் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய மற்றும் ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளும் பங்குபற்றியதுடன், இந் நிகழ்வை குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையில் நினைவுப் பரிசுகளும் பரிமாறப்பட்டன.