இலங்கை மற்றும் ஐக்கிய இராச்சிய இருதரப்பின் ஏற்பாடுகளுடன் நீர்வரைவியல் ஒத்துழைப்பை வலுப்படுத்துகின்றனர்.

இலங்கையின் நீர்வரைவியல் திறன்களை மேம்படுத்துவதற்கான ஒரு முக்கிய நடவடிக்கையை மேற்கொண்டு, இலங்கை தேசிய நீரியல் அலுவலகத்திற்கும் (SLNHO) ஐக்கிய இராச்சிய நீர்வரைவியல் அலுவலகத்திற்கும் (UKHO) இடையிலான இருதரப்பு ஒப்பந்த்திற்கு கையொப்பமிடல், இன்று (2025 பெப்ரவரி 14) கொழும்பில் உள்ள பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.

இதன்படி, இந்த இருதரப்பு உடன்படிக்கையானது நீர்வரைவியல் துறையில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், இலங்கையின் நீர்வரைவியல் பொருட்களை சர்வதேச சந்தையில் விற்பனை செய்வதன் மூலம் அறிவு பரிமாற்றம், திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் குறிப்பிடத்தக்க வருமானத்தை ஈட்டுவதற்கு வசதியாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வரைவியல் அலுவலகத்தின் ரியர் அட்மிரல் Angus Essenhigh மற்றும் இலங்கையின் தேசிய நீர்வரைவியல் அலுவலகத்தின் ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய ஆகியோர், ஐக்கிய இராச்சியம் மற்றும் இலங்கை சார்பில் ஒப்பந்தத்தில் கையெழுத்திடல், பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்டா (ஓய்வு) அவர் கலந்து கொண்டதோடு, இந் நிகழ்வில் தேசிய நீரியல் சபையின் தலைவர் ரியர் அட்மிரல் சிசிர ஜெயக்கொடி (ஓய்வு), ஐக்கிய இராச்சியத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் உயர் அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் இலங்கை தேசிய நீர்வரைவியல் அலுவலக அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

இலங்கைக்கான விஜயத்தின் போது ரியர் அட்மிரல் Angus Essenhigh, இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட மற்றும் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் எயார் வைஸ் மார்ஷல் சம்பத் துய்யகொண்தா (ஓய்வு) ஆகியோர் உத்தியோகபூர்வமாக சந்தித்து இரு நாடுகளுக்கும் இடையிலான மூலோபாய கடல்சார் ஒத்துழைப்பு மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து கலந்துரையாடினர்.

இந்த இருதரப்பு உடன்படிக்கையானது, நீர்வரைவியல் துறையில் இலங்கைக்கு ஐக்கிய இராச்சியத்தின் நீண்டகால ஆதரவின் தொடர்ச்சியைக் காட்டுகிறது, மேலும் நீண்ட காலமாக உலகளவில் சுமார் 75% சர்வதேச வரைபடங்கள் / இலத்திரனியல் கடல்சார் வரைபடங்களை தயாரிக்கும் ஐக்கிய இராச்சியத்தின் நீரியல் அலுவலகம், இலங்கையின் தேசிய நீரியல் காரியாலயத்தின் நீரியல் உற்பத்திகளை சர்வதேச சந்தையில் விற்க தேவையான உள்கட்டமைப்பு மற்றும் பிற வசதிகளைக் ஏற்படுத்தி கொடுத்து, இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம் ஐக்கிய இராச்சியத்தின் நீரியல் அலுவலகம் அத்தகைய வசதிகளை நிறுவுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. உட்கட்டமைப்பு அபிவிருத்தியின் மூலம், இலங்கை நீரியல் அலுவலகம் ஐக்கிய இராச்சியம் நீரியல் அலுவலகம் மூலம் இலத்திரனியல் கடல்சார் வரைபடங்கள் மற்றும் பிற நீர்வரைவியல் தயாரிப்புகளை விற்பனை செய்வதன் மூலம் கணிசமான வருமானத்தை ஈட்டுவதற்கு எதிர்பார்ப்பதோடு, தற்போது ஐக்கிய இராச்சியத்திடம் இருக்கும் இந்நாட்டு முதன்மையான கடல்சார் வரைப்பட உற்பத்தி அதிகாரத்தை இச்செயற்பாட்டால் எதிர்காலத்தில் இலங்கை நீரியல் காரியாலயத்திற்கு பெற்று கொள்வதற்கு வாய்ப்புகள் உண்டாகும்.

மேலும், இந்த இருதரப்பு ஒப்பந்தத்தின் மூலம், சர்வதேச கடல்சார் வரைபடங்களை உருவாக்குவதில் முன்னணி பங்குதாரராக பங்களிக்க இலங்கை நீர்வரைவியல் அலுவலகம் பெரிதும் உதவுவதோடு, ஒரு தீவு நாடாக இலங்கையின் நீண்ட கால தேவையை நிறைவேறியதையும் இது குறிக்கிறது.