ராஜாங்கனை, நீர்த்தேக்கத்தில் உள்ள மதகினை சீர்செய்வதற்கு கடற்படையின் சுழியோடி பங்களிப்பு
செயலற்ற நிலையில் இருந்த ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இடது கரை வான் மதகைச் சரிசெய்து அதனை மீண்டும் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025 மார்ச் 05 முதல் 07 ஆம் திகதி வரை சுழியோடி ஆதரவினை வழங்க கடற்படையினால் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இதற்கமைவாக, ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் இடது கரை மதகில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, மதகினை உடனடியாக சீர்செய்யுமாறு அநுராதபுரம் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் கடற்படையினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, வடமேற்கு கடற்படை கட்டளையின் சுழியோடக் குழுவினர் அதன் நீர் கசிவைத் தடுத்து செயலற்றிருந்த மதகின் கேபலினை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், ராஜாங்கனை நீர்த்தேக்கத்தின் மதகுகளை கடற்படையின் உதவியுடன் சீர்செய்ததன் பின்னர், 10,000 ஏக்கருக்கும் அதிகமான நெற்பயிர்களுக்கு பாசன நீரை திறம்பட விடுவிக்க இதன் மூலம் முடியுமாகும்.