யாழ்ப்பாணம், பாலைதீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழாவை வெற்றிகரமாக நடத்துவதற்கு கடற்படையினர் ஆதரவளித்தனர்

யாழ்ப்பாணம் பாலைத்தீவு புனித அந்தோனியார் தேவாலயத்தின் வருடாந்த பெருவிழா 2025 மார்ச் மாதம் 21 மற்றும் 22 ஆகிய இரு தினங்களில் மிக விமர்சையாக நடாத்தப்பட்டதுடன், இவ்விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்குத் தேவையான உட்கட்டமைப்புகளை நிறுவுவதற்கான பணிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.

அதன்படி, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தலின் கீழ் வடக்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையில் இவ்விழாவை வெற்றிகரமாக நடத்துவதற்காக கடல் போக்குவரத்து வசதிகள், சுகாதார வசதிகள், மருத்துவ வசதிகள், குடிநீர் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகள் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டதுடன், பெருவிழாவில் பங்குபற்றிய பக்தர்களின் பாதுகாப்புக்காக உயிர் காக்கும் குழுக்களையும் கடற்படையினர் ஈடுபடுத்தியிருந்தனர்.

வடக்கு மக்களின் சமூக நலன் மற்றும் சமய மற்றும் கலாச்சார நல்லிணக்கத்திற்காக கடற்படையினரின் பங்களிப்பானது வழங்கப்படுகின்ற இந்த பெருவிழாவின் பிரதான பூஜையானது யாழ் மறைமாவட்ட ஆயர் கௌரவ பீ. ஜோசப்தாஸ் ஜெபரத்தினம் ஆண்டகை அவர்களின் தலைமையில், இடம்பெற்றதுடன், அதற்காக தீவின் ஏனைய பகுதிகளை பிரதிநிதித்துவப்படுத்தும் ஏனைய அருட்தந்தைகளும் அருட்சகோதரிகளும் கலந்துகொண்டனர்.