இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 ஏப்ரல் 01 அன்று திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் மற்றுமொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்ச்சியானது 2025 ஏப்ரல் 01 அன்று திருகோணமலை வைத்தியசாலை வளாகத்தில் நடைபெற்றது.

அதன் பிரகாரம் கடற்படை தளபதியின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் பேரில் கடற்படையினர் பல்வேறு சமூக நலத்திட்டங்களை அமுல்படுத்துவதுடன் அதன் ஒரு படியாக கிழக்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையில் திருகோணமலை இரத்தமாற்ற நிலையங்களின் அவசர இரத்த தேவைக்காக வைத்தியசாலையின் கோரிக்கைகளுக்கு அமைய இந்த இரத்ததான நிகழ்ச்சியானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மேலும், கட்டளை வைத்தியசாலையின் ஊழியர்கள் மற்றும் திருகோணமலை இரத்த மாற்று நிலைய ஊழியர்களின் ஒத்துழைப்புடன் நடைபெற்ற இந்த மாபெரும் சமூக சேவையை வெற்றியடையச் செய்யும் முகமாக கிழக்கு கடற்படை கட்டளையின் ஏராளமான கடற்படையினர் இரத்ததானம் செய்ய முன்வந்து இரத்த தானம் செய்தனர்.