கடற்படையினரால் இரண்டு இரத்த தானத்திட்டங்கள் ஏற்பாடுச் செய்யப்பட்டன
இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட இரண்டு இரத்த தான திட்டங்களானது 2025 மே 22, 23 ஆகிய இரு தினங்களில் இலங்கை கடற்படைக் கப்பல் தம்மென்னா நிறுவனத்தில் மற்றும் கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைபெற்றது.
அதன்படி, இந்த இரத்த தானத் திட்டங்கள், தேசிய போர் வீரர்களின் நினைவு நாள் மற்றும் வெசாக் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு, கடற்படைத் தளபதியின் அறிவுறுத்தல்கள் மற்றும் வழிகாட்டுதலின் கீழ், வட மத்திய கட்டளை தளபதி மற்றும் இலங்கை கடற்படை கப்பல் தம்மென்னா நிறுவனத்தின் கட்டளை தளபதியின் மேற்பார்வையுடன் மன்னர் மாவட்டத்தின் உள்ள இரத்த வங்கிகளுடன் ஒருங்கிணைந்து 2025 மே 22 ஆம் திகதி ஒர் நிகழ்ச்சி திட்டமும் மற்றைய நிகழ்ச்சித் திட்டம் கிழக்கு கடற்படை கட்டளை தளபதியின் மேற்பார்வையின் கீழ் 2025 மே 23 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளையின் கடற்படை மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும், கிழக்கு கடற்படை கட்டளை மற்றும் வட மத்திய கடற்படை கட்டளைகளைச் சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் தாமாகவே முன்வந்து இந்த உன்னத சமூக நோக்கத்திற்கு பங்களிப்புச் செய்தனர்.