கடற்படைத் தளபதி வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டார்
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2025 ஜூன் 06 முதல் 08 வரை வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டபோது, கடற்படை கட்டளையுடன் இணைக்கப்பட்ட அதிகாரிகள், மாலுமிகளை சந்தித்து உரையாற்றியதுடன் கடற்படையின் நடவடிக்கைகள், பயிற்சி நடவடிக்கைகள் மற்றும் மேம்பாட்டு மற்றும் நலன்புரி திட்டங்களை திறம்பட நடத்துவதற்கான அறிவுரைகளை வழங்கி, கடற்படையின் பொறுப்புகள் குறித்து விளக்கினார்.
அதன்படி, கடற்படைத் தளபதியை வடமேற்கு கடற்படை கட்டளைத் தளபதியினால் வரவேற்க பட்டதன் பிறகு, கடற்படை தளபதி முதலில் இலங்கை கடற்படை கப்பல் விஜய மற்றும் அந்த நிறுவனத்தின் கடற்படைப் பிரிவுகளான ஆனவாசல, நொரோச்சோலை, உச்சமுனிய மற்றும் பத்தலங்குண்டுவ ஆகியவற்றால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைள், நலன்புரி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளை மேற்கூறிய கட்டளைத் தளபதிகள் மற்றும் பிரிவுகளின் பிரதானிகளுடன் ஆய்வு செய்தார். பின்னர், இலங்கை கடற்படை கப்பல் பரண நிறுவனத்தால் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள், நலன்புரி மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகள் கவனிக்கப்பட்டு, இந்த நடவடிக்கைகள் திறமையாக மேற்கொள்ள தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
கடற்படைத் தளபதியின் வடமேற்கு கடற்படை கட்டளையில் மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயத்தின் போது, கட்டளையுடன் இணைக்கப்பட்ட கடற்படை வீரர்களுக்கு இலங்கை கடற்படை கப்பல்களான விஜய மற்றும் பரணவில் கடற்படையின் கடமைகள் குறித்து விளக்கப்பட்டது.
இந்நிகழ்வில் கருத்துக்களை தெரிவித்த கடற்படைத் தளபதி, இலங்கை கடற்படைக்கு தேசிய பாதுகாப்பில் முதன்மைப் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டுள்ளது என்றும், கடல்சார் வலயத்தின் பாதுகாப்பை உறுதி செய்வதும், பொருளாதார நடவடிக்கைகளை பாதுகாப்பாக நடத்துவதற்குத் தேவையான நிலையான கடல்சார் வலயத்தை உருவாக்குவதும் இலங்கை கடற்படையின் பொறுப்பு என்று கூறினார். மனிதாபிமான நடவடிக்கையின் போது நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க கடற்படை வீரர்கள் ஆற்றிய விலைமதிப்பற்ற பங்களிப்பை கடற்படைத் தளபதி மேலும் பாராட்டினார். மேலும், நாட்டை சீர்குலைக்கும் பிரிவினைவாத கருத்துக்களை ஊக்குவிக்க பல்வேறு அமைப்புகள் மேற்கொள்ளும் முயற்சிகளைத் தடுக்க, முறையான வழிமுறையின்படி, ஒதுக்கப்பட்ட கடமைகளை நிறைவேற்றுவதற்கான அர்ப்பணிப்பை எதிர்பார்ப்பதாகவும் கூறினார். தேசிய பாதுகாப்பிற்கு இணங்க, நாட்டின் மற்றும் மக்களின் பாதுகாப்பிற்காக, 'க்லீன் ஸ்ரீ லங்கா' தேசிய திட்டம் உட்பட அரசாங்கத்தின் அபிவிருத்தி செயல்முறைக்கு பங்களிப்பு செய்தல், உயர் ஒழுக்கம், பயிற்சி, உடல் மற்றும் மன உறுதியுடன் கூடிய தொழில்நுட்ப ரீதியாக திறமையான கடற்படையை பராமரிப்பது அவசியம் என்றும், இதற்காக, அனுபவம் வாய்ந்த, சிரேஷ்ட மாலுமிகளிடமிருந்து கனிஷ்ட மாலுமிகளுக்கு தொடர்ந்து ஆலோசனை மற்றும் வழிகாட்டுதலை வழங்குவது அவசியம் என்றும் வலியுறுத்தினார்.
எதிர்கால சந்ததியினரை போதைப்பொருள் அச்சுறுத்தலில் இருந்து காப்பாற்றுவதற்காக இலங்கை கடற்படை உள்நாட்டு நீர்வலயங்களிலிருந்து சர்வதேச நீர்வலயங்கள் வரை மேற்கொண்ட விதிவிலக்கான நடவடிக்கைகளுக்காக உள்ளூர் மற்றும் சர்வதேச அளவில் கடற்படையானது பாராட்டப்பட்டதாகவும், வடமேற்கு கடற்கரையில் சட்டவிரோத பொருட்கள் கடத்தல் மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகளைத் தடுப்பதில் கட்டளையின் கடற்படை வீரர்களின் பங்களிப்பைப் பாராட்டியதாகவும் கடற்படைத் தளபதி கூறினார். நாட்டின் தேசிய பாதுகாப்பிற்கு ஏற்ப, கடற்படை ஒழுக்கத்தை உயர் மட்டத்தில் பேணுவதோடு, சமூக நலத் திட்டங்கள், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கைகள் மற்றும் 'க்லீன் ஸ்ரீ லங்கா' தேசிய திட்டத்தின் கீழ் உள்ள திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு கடமைகளைச் செய்வதற்கும், பாதுகாப்பான நாட்டை உருவாக்குவதற்கும், ஒவ்வொரு கடற்படை வீரரும் புதிய அறிவு, திறன்கள் மற்றும் அணுகுமுறைகளை வளர்த்துக் கொள்ள வேண்டும் என்று கடற்படைத் தளபதி மேலும் வலியுறுத்தினார்.
மேலும், கடற்படைத் தளபதியின் வடமேற்கு கட்டளைப் உத்தியோகபூர்வ விஜயத்துடன் இணைந்து, கடற்படை சேவா வனிதா பிரிவின் கௌரவத் தலைவி, வடமேற்கு கடற்படை கட்டளைப் பகுதியில் உள்ள நலன்புரி கடைகள், முன்பள்ளிகள் மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவால் நடத்தப்படும் யோகட் திட்டம் உள்ளிட்ட சேவா வனிதா திட்டங்களை ஆய்வு செய்து, அந்தத் திட்டங்களை வெற்றிகரமாக செயல்படுத்த தேவையான வழிமுறைகளை வழங்கினார்.