அம்பாறை நாமல் ஓயா நீர்த்தேக்கத்தில் உள்ள மதகினை சீர்செய்வதற்கு கடற்படையின் சுழியோடி பங்களிப்பு
செயலற்ற நிலையில் இருந்த நாமல் ஓயா நீர்த்தேக்கத்தின் இடது கரை வான் மதகைச் சரிசெய்து அதனை மீண்டும் செயல்பாட்டு நிலைக்கு கொண்டு வருவதற்காக 2025 ஜூன் 06 ஆம் திகதி சுழியோடி ஆதரவினை கடற்படையினர் வழங்கினர்.
அதன்படி, அம்பாறையில் உள்ள நாமல் ஓயா நீர்த்தேக்கத்தின் மதகில் ஏற்பட்டுள்ள கோளாறு காரணமாக, மதகினை உடனடியாக சீர்செய்யுமாறு அம்பாறை மாவட்ட செயலாளர் கடற்படையினரிடம் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் சுழியோடக் குழுவினர் மதகினை சீர்செய்வதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மேலும், கடற்படையின் தொழினுட்ப மற்றும் விசேட சேவையினை எந்தவொரு சந்தர்ப்பத்திலும் அனர்த்த மற்றும் அவசர நிலைமைகளில் பதிலளிப்பதில் கடற்படையானது தொடர்ந்து ஆயத்தமாக உள்ளது.