கடற்படையினரால் வடக்கில் உள்ள மீனவ சமூகத்தை ஆபத்தான சுகாதாரம் மற்றும் அவசர நோய் நிலைமைகளை முகாமைத்துவம் செய்வது தொடர்பான வேலைத் திட்டம்
அரச கோட்ப்பாடுகளுக்கு அமைவாக சமூக வலுவூட்டலுக்கு பங்களிக்கும் வகையில், இலங்கை கடற்படையினர், கடலோர காவல்படைத் திணைக்களம் மற்றும் மீன்வள, நீர்வளத் திணைக்களத்துடன் இணைந்து, கடலில் சுகாதாரம் மற்றும் அவசரகால மேலாண்மை குறித்து மீனவ சமூகத்திற்கு அறிவூட்டவும் அதிகாரம் அளிப்பதற்கும் ஒரு செயற்திட்டத்தை 2025 ஜூன் 05 முதல் 09 வரை இலங்கை கடற்படைக் கப்பல் எலார, கடற்படை துணை நிறுவனங்களான மைலடி மற்றும் பருத்தித்துறை ஆகியவற்றை மையமாகக் கொண்டு கடற்படை இவ் திட்டத்தை வெற்றிகரமாக நடத்தியது.
அதன்படி, வடக்கு கடற்படை கட்டளை மருத்துவ ஊழியர்களின் வளங்களைக் கொண்டு ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிற்சித் திட்டம், கடலில் அவசரநிலை ஏற்படும் சந்தர்ப்பத்தில் அடிப்படை முதலுதவி வழங்குவதன் முக்கியத்துவம் மற்றும் அத்தகைய அவசரநிலையை எவ்வாறு நிர்வகிப்பது, தொற்றாத மற்றும் தொற்று நோய்களைத் தடுப்பது, போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பது, மன நல்வாழ்வு மற்றும் நல்ல சுகாதார நடைமுறைகளைப் பின்பற்றுவது குறித்து மீனவ சமூகத்திற்குக் விழிப்புணர்வூட்டப்பட்டது.
மேலும் இப்பயிற்சி நிகழ்ச்சியில் யாழ்ப்பாணம் முன்னை, கொட்டாடி, மைலடி, பலாலி, கயிட்ஸ்,குருநகர், தாயெட்டி மற்றும் காரைநகர் கடற்றொழிலாளர் சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் மீனவ சமூகத்தினர் பலரும் கலந்துகொண்டனர்.