இரண்டு கின்னஸ் உலக சாதனைகளை தன்வசப்படுத்தியதை உறுதிப்படுத்திய ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களுக்கு கடற்படைத் தளபதியின் பாராட்டுக்கள்

ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) 2025 மார்ச் 09 ஆம் திகதி இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் (Manual Treadmill) 24 மணிநேரம் தொடர்ந்து நடந்து இரண்டு (02) உலக கின்னஸ் சாதனைகளைப் நிகழ்த்தியதுடன். அந்த கின்னஸ் உலக சாதனைக்கான உத்தியோகப்பூர்வ அங்கீகாரத்திற்கான சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களுக்கு கிடைக்கப்பெற்றது. இதன் மூலம் இலங்’கை கடற்படைக்கு கௌரவத்தையும் அபிமானத்தையும் பெற்றக் கொடுத்த்தனால் 2025 ஜூன் 12 ஆம் திகதி கடற்படைத் தளபதி தனது பாராட்டுகளை இலங்கை கடற்படை சார்பாக தெரிவித்தார்.

அதன்படி, இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் 12 மணி நேரத்தில் 94.3 கி.மீ வேகமாக ஓடியும், இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் 12 மணி நேரத்தில் ஆண்களில் அதிகூடிய தூரம் நடந்ததற்கான கின்னஸ் உலக சாதனையும் இயந்திரம் அல்லாத நடைபயிற்சி இயந்திரத்தில் 24 மணி நேரத்தில் ஆண்களில் 174.08 கி.மீ தூரம் வேகமாக ஓடியதற்காகவும், இவ்வாறு இரண்டு (02) உலக கின்னஸ் சாதனைகளுக்கு அதற்கு பொறுப்பான குழுவால் ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களுக்கு வழங்கப்பட்ட உத்தியோகப்பூர்வ சான்றிதழ்கள் மற்றும் பதக்கங்களை கடற்படைத் தளபதியிடம் பார்வையிடுவதற்காக வழங்கப்பட்டன.

மேலும், கடற்படையின் ஓய்வுபெற்ற கடற்படை சிரேஷ்ட அதிகாரியாக, இலங்கை கடற்படைக்கும் தாய்நாட்டிற்கும் பெரும் புகழையும் பெருமையையும் கொண்டு வந்து 02 உலக கின்னஸ் சாதனைகளை நிலை நாட்டியதால், இலங்கை இளைஞர் சமூகத்திற்கு மாத்திரமன்றி முழு உலகிற்கும் ஒரு பெறுமதியான முன்மாதிரியாக அமைந்ததற்காக ரியர் அட்மிரல் பிரின்ஸ்லி லியனகே (ஓய்வு) அவர்களை கடற்படைத் தளபதி பாராட்டினார்.