கடற்படை இரத்ததானம் செய்யும் சமூகப்பணியில் ஈடுபட்டது

இலங்கை கடற்படையால் சமூக சேவையாக ஏற்பாடு செய்யப்பட்ட மற்றொரு இரத்த தான நிகழ்வானது 2025 ஜூன் 11 ஆம் திகதி பூஸ்சவில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் நிபுன நிறுவனத்தின் கடற்படை மருத்துவமனை வளாகத்திலும், யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையில் உள்ள இலங்கை கடற்படைக் கப்பல் காஞ்சதேவ நிறுவன வளாகத்திலும் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, தேசிய போர்வீரர் நினைவு தினத்துடன் இணைந்து தெற்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதிகளின் மேற்பார்வையின் கீழ் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த சமூக சேவைத் திட்டம், இரத்த இருப்புக்களை முறையாகப் பராமரிக்கும் நோக்கில் காலி தேசிய மருத்துவமனை இரத்த வங்கி மற்றும் யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனை இரத்த வங்கியுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டது.

மேலும், தெற்கு மற்றும் வடக்கு கடற்படை கட்டளைகளைச் சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் தன்னார்வத் தொண்டு செய்து இந்த உன்னத சமூக நோக்கத்தை வெற்றிபெறச் செய்தனர்.