கடற்படை வீரர்களுக்கு உள்நாட்டு விவகாரப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் நிகழ்ச்சி கடற்படை தலைமையகத்தில் நடைபெற்றது

இலங்கை கடற்படைக்குள் நிறுவப்பட்ட உள்நாட்டு விவகாரப் பிரிவுகளின் செயல்பாடுகள் குறித்த விரிவுரையொன்று, இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் உறுப்பினர்களால், 2025 ஜூன் 11 ஆம் திகதி கடற்படை தலைமையகத்தில் உள்ள அட்மிரல் சோமதிலக திசாநாயக்க கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.

அதன்படி, இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சிக்காக வருகை தந்த இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழுவின் ஜனாதிபதி சட்டத்தரணி சேத்திய குணசேகர உள்ளிட்ட குழுவினர் கடற்படைத் தளபதியைச் சந்தித்து சுமூகமான கலந்துரையாடலில் ஈடுபட்டதன் பின்னர், விழிப்புணர்வு நிகழ்ச்சி தொடங்கியது. அங்கு ஆரம்ப உரையை நிகழ்த்திய கடற்படைத் தளபதி, ஒருமைப்பாட்டின் அடிப்படையில் ஒரு கடற்படையை உருவாக்குவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தி, வெளிப்படைத்தன்மை, பொறுப்புக்கூறல் மற்றும் ஊழல் இல்லாத கடற்படையை உருவாக்குவதன் அவசியத்தை மேலும் வலியுறுத்தினார்.

இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி மூன்று முக்கிய சொற்பொழிவு அமர்வுகளுடன் நடைபெற்றதுடன், அங்கு 2023 09 ஆம் இலக்க ஊழல் தடுப்புச் சட்டம், உள்நாட்டு விவகாரப் பிரிவுகளின் பத்திரங்கள் மற்றும் பொறுப்புகள், புதிய சொத்துக்கள் மற்றும் பொறுப்புகள் அறிவிப்புச் சட்டம், இலஞ்சம் மற்றும் ஊழலின் சமூக விளைவுகள் போன்றவற்றைப் பற்றிய ஆழமான புரிதலை வழங்கியது.

மேலும், கடற்படை தலைமையகத்தின் உள்நாட்டு விவகாரப் பிரிவு மற்றும் கடற்படை கட்டளைகளால் நிறுவப்பட்ட உள்நாட்டு விவகாரப் பிரிவுகளைச் சேர்ந்த 72 அதிகாரிகள் மற்றும் 27 மாலுமிகள் உட்பட கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகள் குழுவினரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.