சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பதில் கடற்படை, அரசு நிறுவனங்கள் மற்றும் திருகோணமலை மீனவ சமூகம் முன்னிலை வகிக்கின்றன
கிழக்கு மாகாணத்தில் உள்ள மீனவ சமூகத்தினருக்கு சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் கடல் சூழல், சுற்றுலாத் துறைக்கு மற்றும் எதிர்கால சந்ததியினர் மீது ஏற்படும் பாதகமான தாக்கம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் ஒரு சிறப்பு நிகழ்ச்சி, திருகோணமலை கடற்படை கப்பல்துறை வளாகத்தில், கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியின் தலைமையில், அப்பகுதியில் உள்ள சட்ட அமலாக்க முகவர் மற்றும் கிழக்கு மாகாண மீனவர் சங்க பிரதிநிதிகளின் பங்கேற்புடன், 2025 ஜூன் 13 ஆம் திகதி அன்று நடைபெற்றது.
அதன்படி, கிழக்கு கடலில் அதிகரித்து வரும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுப்பது, கடல் சூழலைப் பாதுகாப்பது, சட்டப்பூர்வ மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவ சமூகத்தின் வாழ்வாதாரத்தைப் பாதுகாப்பது, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் மீன் வளங்கள் அழிக்கப்படுவது, சுற்றுலாத் துறையில் ஏற்படும் பாதகமான தாக்கம், நிலையான மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதை ஊக்குவித்தல் மற்றும் எதிர்கால சந்ததியினருக்கு கடல் சூழலைப் பாதுகாப்பது குறித்து மீனவ சமூகத்திற்கு விழிப்புணர்வை ஏற்படுத்தும் என்று இந்த சிறப்பு விழிப்புணர்வு திட்டம் மூலம் எதிர்பார்க்கப்பட்டது.
மேலும், இந்த சட்டவிரோத மீன்பிடி பிரச்சினைகள் முறையாக தீர்க்கப்படாவிட்டால் எதிர்காலத்தில் ஏற்படக்கூடிய பாதகமான விளைவுகள் குறித்தும், தற்போதுள்ள சட்ட கட்டமைப்பு குறித்தும் மீனவ சமூகத்திற்கு தெரிவிக்கப்பட்து. மேலும் சட்டப்பூர்வமாக மீன்பிடித் தொழிலில் ஈடுபட்டுள்ள மீனவர்களின் கோரிக்கைகள் மற்றும் பிரச்சினைகள் குறித்து விரிவாக விவாதிக்கப்பட்டு, அவற்றில் சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு, பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கான நடவடிக்கைகளை எடுப்பதற்கான அடிப்படை அடித்தளம் அமைக்கப்பட்டது.
இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியில் திருகோணமலை மாவட்ட செயலாளர், கிழக்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகள், திருகோணமலை சிரேஷ்ட பொலிஸ் கண்காணிப்பாளர், திருகோணமலை மீன்வள ஆய்வாளர்களின் உதவி இயக்குநர், சுற்றுலா பணியகத்தின் கிழக்கு மாகாண பொது மேலாளர், திருகோணமலை வெடிபொருள் கட்டுப்பாட்டாளர் மற்றும் திருகோணமலை மாவட்ட மீனவ சங்கங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.