கடற்படைத் தளபதியின் தெற்கு கடற்படை கட்டளைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது செயல்பாட்டு நோக்கம் குறித்து விளக்கப்பட்டது

கடற்படைத் தளபதி, 2025 ஜூன் 15 அன்று தெற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டிருந்தபோது, கட்டளையின் கீழ் உள்ள இலங்கை கடற்படைக் கப்பலான காவன்திஸ்ஸவின் செயல்பாட்டுத் தயார்நிலை, நிர்வாக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை ஆய்வு செய்து, நடவடிக்கைகளை முறையாக செயல்படுத்துவதை உறுதி செய்வதற்கான தேவையான நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்தார்.

அதன்படி, கடற்படைத் தளபதி, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியுடன் இணைந்து, இலங்கை கடற்படைக் கப்பலான காவன்திஸ்ஸவின் அமதுவ கடற்படைப் பிரிவினால் மேற்கொள்ளப்படும் கண்காணிப்பு மற்றும் செயல்பாட்டு நடவடிக்கைகளை ஆய்வு செய்தார், பின்னர் இலங்கை கடற்படைக் கப்பலான காவன்திஸ்ஸவால் மேற்கொள்ளப்படும் செயல்பாட்டு, நிர்வாக மற்றும் நலன்புரி நடவடிக்கைகளை ஆய்வு செய்தார். தெற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளுடன் கடற்படைத் தளபதி ஒரு மூலோபாய அளவிலான கலந்துரையாடலையும் நடத்தினார், அங்கு அவர் கட்டளையின் நோக்கத்தை மீண்டும் உறுதிப்படுத்தியதுடன், குறித்த பயணம் அந்தப் பகுதியில் உள்ள முக்கிய கடல்சார் உள்கட்டமைப்பின் பாதுகாப்பு நிலைமையை மதிப்பிடுவதற்கும் எதிர்கால மூலோபாய முன்னுரிமைகள் குறித்த ஆலோசனைகளை வழங்குவதற்கும் ஒரு வாய்ப்பை வழங்கியது.

மேலும், இலங்கை கடற்படைக் கப்பலான காவன்திஸ்ஸவின் கட்டளை அதிகாரி உட்பட கடற்படை வீரர்களும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.