Culinary Art Food Expo 2025 கண்காட்சியில் கடற்படையின் பிரதிநிதித்துவத்தினால் தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்கள் பெறப்பட்டன

கொழும்பில் உள்ள பண்டாரநாயக்க நினைவு சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்ற Culinary Art Food Expo 2025 கண்காட்சியில், Chief Petty Officer (ககா) டப்பிஏ சுபசிங்க பழங்கள் மற்றும் காய்கறி செதுக்குதல் பிரிவில் (Fruits and Vegetable Carving) தங்கப் பதக்கத்தையும், பனி செதுக்குதல் பிரிவில் (Ice carving) வெண்கலப் பதக்கத்தையும் வென்றார். பதக்கங்கள் மற்றும் சான்றிதழ்கள் 2025 ஜூன் 17 அன்று கடற்படையின் தலைமை அதிகாரியிற்கு காட்சிப்படுத்தப்பட்டதுடன், கடற்படையின் தலைமை அதிகாரி, சிரேஷ்ட மாலுமியின் சாதனைக்கு வாழ்த்து தெரிவித்ததோடு, இலங்கை கடற்படையின் நற்பெயரை மேம்படுத்துவதில் அவர் ஆற்றிய விசேட பங்களிப்பை அங்கீகரிக்கும் வகையில் அவருக்கு பாராட்டு கடிதத்தையும் வழங்கினார்.

இலங்கை மற்றும் தெற்காசிய பிராந்தியம் முழுவதும் உள்ள நட்சத்திர வகுப்பு ஹோட்டல்கள் மற்றும் விருந்தோம்பல் சேவைகளைச் சேர்ந்த சுமார் 3,000 சமையல் நிபுணர்களின் பங்கேற்புடன், இலங்கை Chefs Guild of Lanka மற்றும் World Association of Chefs Societies இணைந்து ஏற்பாடு செய்யப்பட்ட இந்த உணவு கண்காட்சியில், கடற்படை மாலிமா விருந்தோம்பல் சேவையுடன் இணைக்கப்பட்ட Chief Petty Officer டப்பிஏ சுபசிங்க பழம், காய்கறி மற்றும் பனி செதுக்குதல் பிரிவுகளில் சிறந்த திறன்களை வெளிப்படுத்தி தங்கம் மற்றும் வெள்ளி பதக்கங்களை வென்றார்.

மேலும், சிரேஷ்ட மாலுமியான Chief Petty Officer டப்பிஏ சுபசிங்க, அனைத்து மாலுமிகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரியாக அமைந்தது மட்டுமல்லாமல், இலங்கை கடற்படைக்கு பெருமை சேர்த்ததற்காக கடற்படையின் தலைமை அதிகாரியால் பாராட்டப்பட்டார்.