கடற்படை சிறப்பு மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சையானது நடத்தப்பட்டது

இலங்கை கடற்படையின் மற்றொரு சமூகப் பணியாக ஏற்பாடு செய்யப்பட்ட மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சையானது 2025 ஜூன் 21 அன்று திருகோணமலை மாவட்டத்தின், ஆண்டாங்குளம், வேலங்கண்ணி கத்தோலிக்க தேவாலயத்தில் வெற்றிகரமாக நடைபெற்றது.

அதன்படி, வேலங்கண்ணி கத்தோலிக்க தேவாலயத்தின் பொன்விழா கொண்டாட்டங்களுடன் இணைந்து, கிழக்கு கடற்படை கட்டளை மருத்துவமனையின் மருத்துவ ஊழியர்களின் பங்கேற்புடன் நடத்தப்பட்ட இந்த மருத்துவ மற்றும் பல் மருத்துவ சிகிச்சையினால், மன அழுத்த மேலாண்மை, ஆபத்தான போதை பழக்கங்களைத் தடுப்பது, மன ஆரோக்கியத்தைப் பேணுதல் மற்றும் தொற்றாத நோய்களை முன்கூட்டியே கண்டறிதல் போன்ற விழிப்புணர்வுகள் வழங்கப்பட்டன.