திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் புதிய தளபதியாக கொமடோர் தினேஷ் பண்டார பொறுப்பேற்றார்

இலங்கை கடற்படையின் முதன்மை பயிற்சி நிறுவனமான திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகடமியின் 41வது கட்டளை அதிகாரியாக கொமடோர் தினேஷ் பண்டார 2025 ஜூலை 02 ஆம் திகதி பொறுப்பேற்றார்.

அதன்படி, கடற்படை மரபுப்படி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமிக்கு புதிய தளபதி வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, அகாடமியின் தளபதியாக பணியாற்றிய ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதியின் கடமைகளை கொமடோர் தினேஷ் பண்டாரவிடம் ஒப்படைத்தார்.

மேலும், கடமைகள் ஒப்படைக்கப்பட்டதைத் தொடர்ந்து, கடற்படை மரபுகளின்படி கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் இருந்து ரியர் அட்மிரல் ரோஹன் ஜோசப் விடைபெற்றார்.