சவுதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்தில் உள்ள இலங்கை பாதுகாப்பு ஆலோசகர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இந்தியாவின் புது தில்லியில் உள்ள சவுதி அரேபிய இராச்சியத்தின் தூதரகத்தில் இலங்கை பாதுகாப்பு ஆலோசகராகவும் பணியாற்றும் Captain (Navy) Hussain O Alkowaileet, இன்று (2025 ஆகஸ்ட் 04) கடற்படைத் தலைமையகத்தில் ஒரு உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படைத் தளபதிக்கும் சவுதி அரேபிய இராச்சிய தூதரகத்தின் இலங்கை பாதுகாப்பு ஆலோசகருக்கும் இடையே கடற்படைத் தலைமையகத்தில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உட்பட பரஸ்பர ஆர்வமுள்ள இருதரப்பு விடயங்கள் குறித்து ஒரு சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.