இலங்கைக்கான இந்தோனேசிய குடியரசின் தூதர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்
இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதர் கௌரவ Dewi Gustina Tobing அவர்கள், கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவை 2025 ஆகஸ்ட் 13 ஆம் திகதி கடற்படைத் தலைமையகத்தில் வைத்து உத்தியோகபூர்வ சந்திப்புக்காக சந்தித்தார்.
இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, கடற்படைத் தளபதிக்கும் இலங்கைக்கான இந்தோனேசியக் குடியரசின் தூதருக்கும் இடையே இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பு உட்பட இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது.
மேலும், இந்த உத்தியோகபூர்வ சந்திப்பைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றம் நடைபெற்றது.