தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க கடமைகளைப் பொறுப்பேற்றார்
தென்கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க, தென்கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக 2025 ஆகஸ்ட் 13 ஆம் திகதி தென்கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கடற்படை மரபுப்படி தென்கிழக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் நிமல் ரணசிங்க வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, தென்கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக இருந்த ரியர் அட்மிரல் ஹர்ஷ டி சில்வா, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.