கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ் ஆரச்சிகட்டுவையில் நிறுவப்பட்ட மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது
கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ உதவியுடன் மற்றும் Sunshine Foundation for Good and Sunshine Holdings Pvt. Ltd நிறுவனத்தின் நிதி உதவியுடன், புத்தளம் மாவட்டத்தின் ஆரச்சிகட்டுவ பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள நீர்கொ/ஹெபவடவன தேசிய பாடசாலையில் நிறுவப்பட்ட (01) மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் 2025 ஆகஸ்ட் 21 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது.
இந்த மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்துடன், கடற்படையினால் 1121 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டதுடன், ஆரச்சிகட்டுவ ஹெபவடவன பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்கள் மற்றும் பாடசாலை மாணவர்களின் சுத்தமான குடிநீர் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.