மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜகத் குமார பொறுப்பேற்கிறார்
மேற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜகத் குமார 2025 ஆகஸ்ட் 27 ஆம் திகதி அன்று கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கடற்படை மரபுப்படி மேற்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் ஜகத் குமார வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாகப் பணியாற்றிய கடற்படைத் துணைத் தலைவர் ரியர் அட்மிரல் சந்திம சில்வா, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை ஒப்படைத்தார்.
மேலும், மேற்கு கடற்படை கட்டளையின் சிரேஷ்ட அதிகாரிகளின் வாழ்த்துக்களுக்குப் பிறகு, கடற்படை மரபுப்படி மேற்கு கடற்படை கட்டளையால் ரியர் அட்மிரல் சந்திம சில்வாவுக்கு பிரியாவிடை வழங்கப்பட்டது.