திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் புதிய மொழி கணினி ஆய்வகம் திறக்கப்பட்டது.

பயிற்சியில் ஈடுபடும் அதிகாரிகள் மற்றும் மாலுமிகளின் மொழித் திறன் மற்றும் டிஜிட்டல் கல்வியறிவை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு,அமெரிக்காவின் பூரண பங்களிப்பினாலும் கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் திருகோணமலை கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியில் கட்டப்பட்ட புதிய மொழி கணினி ஆய்வகத்தின் திறப்பு விழா, 2025 செப்டம்பர் 15 ஆம் திகதி பயிற்சி இயக்குநர் ஜெனரல் ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன மற்றும் இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Lieutenant Colonel Matthew House ஆகியோரின் தலைமையில் நடைபெற்றது.

அதன்படி, 30 கணினிகள் மற்றும் ஒரு ஸ்மார்ட் பலகையினை கொண்ட முழுமையாக வடிவமைக்கப்பட்ட புதிய மொழி கணினி ஆய்வகத்தை நிறுவுவதன் மூலம், கடற்படை பயிற்சித் துறையில் புதிய தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், எதிர்கால சவால்களுக்கு இளம் கடற்படை வீரர்களை தயார்படுத்தவும் கடற்படை எதிர்பார்கிறது.

மேலும், இலங்கையில் உள்ள அமெரிக்க தூதரகத்தின் இராஜதந்திர அதிகாரிகள், கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் தளபதி, பயிற்சி ஆலோசனைக் குழு மற்றும் பயிற்சியில் ஈடுபடும் அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.