கடற்படையினால் மாத்தளை மற்றும் அனுராதபுரம் மாவட்டங்களில் நிறுவப்பட்ட 02 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன

கடற்படையின் சமூகப் பணித் திட்டத்தின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி பங்களிப்புடன், கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ பங்களிப்புடன், மாத்தளை மாவட்டத்தின் வில்கமுவ பிரதேச செயலகத்தின் வில்கமுவ பிரதேச சபையிலும், இலங்கையில் உள்ள சீன மக்கள் குடியரசின் தூதரகத்தின் நிதி பங்களிப்புடன், அனுராதபுரம் மாவட்டத்தின் மஹாவிலச்சிய பிரதேச செயலகத்தின் ஓயாமடுவ ஸ்ரீ சம்புத்த மைத்ரி விஹாரையிலும் நிறுவப்பட்ட இரண்டு (02) நீர் சுத்திகரிப்பு நிலையங்கள் 2025 செப்டம்பர் 20 ஆம் திகதி பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டன.

மேலும், இந்த 02 நீர் சுத்திகரிப்பு நிலையங்களுடன், கடற்படை 1132 நீர் சுத்திகரிப்பு நிலையங்களை நிறுவியுள்ளது, இவ்வாறு பொதுமக்களுக்குத் கையளிக்கப்பட்ட இரண்டு நீர் சுத்திகரிப்பு நிலையங்களும், வில்கமுவ மற்றும் ஒயாமடுவவில் உள்ள ஸ்ரீ சம்புத்த மைத்ரி விஹாரையைச் சுற்றியுள்ள ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர்த் தேவைகளை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

“நோயற்ற வாழ்வு - ஆரோக்கியமான மக்கள்” என்ற அரச சுகாதார தொலைநோக்குப் பார்வைக்கு ஏற்ப, இலங்கை கடற்படை இந்த கடற்படை சமூகப் பராமரிப்புத் திட்டத்தை வெற்றிகரமாக மேற்கொண்டு வருகிறது.