இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் ஜகத் குமார பொறுப்பேற்கிறார்

இலங்கை தன்னார்வ கடற்படையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் ஜகத் குமார, 2025 அக்டோபர் 03 அன்று வெலிசரவில் உள்ள தன்னார்வ கடற்படை தலைமையகத்தில் இலங்கை தன்னார்வ கடற்படையின் தளபதியாக கடமைகளைப் பொறுப்பேற்றார்.

கடற்படை மரபுப்படி தன்னார்வ கடற்படை தலைமையகத்திற்கு ரியர் அட்மிரல் ஜகத் குமார வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, தன்னார்வ கடற்படைத் தளபதியாகப் பணியாற்றிய ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேரா, தன்னார்வ கடற்படைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை ஒப்படைத்தார்.

மேலும், தன்னார்வ கடற்படை தலைமையகத்தின் சிரேஷ்ட அதிகாரிகளால் வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், கடற்படை மரபுப்படி தன்னார்வ கடற்படை தலைமையகத்திலிருந்து ரியர் அட்மிரல் எச்என்எஸ் பெரேராவுக்கு பிரியாவிடை செலுத்தப்பட்டதுடன், மேலும் மேற்கு கடற்படை கட்டளைத் தளபதியாகவும், தன்னார்வ கடற்படைத் தளபதியாகவும் ரியர் அட்மிரல் ஜகத் குமார தனது கடமைகளை தொடருவார்.