கடற்படையின் மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்
இலங்கை கடற்படையில் கிட்டத்தட்ட 33 ஆண்டுகள் சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க இன்று (2025 அக்டோபர் 07) கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.
கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையிலான கடற்படை மேலாண்மை வாரியம், இன்று 55வது பிறந்தநாளை முன்னிட்டு ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்கவிற்கு கடற்படைத் தலைமையகத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர் கடற்படை மரபுப்படி சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன், சக அதிகாரிகளுக்கு விடைகொத்த பிறகு, கடற்படை வாகன அணிவகுப்பில் கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்படும்போது சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் அணிவகுத்து நின்று கடற்படை மரபுப்படி ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்கவிற்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.
1992 ஆம் ஆண்டு ஜெனரல் சர் ஜொன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 10வது ஆட்சேர்ப்பின் மாணவச்சிப்பாய் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் ராஜபிரிய சேரசிங்க, கடற்படையின் விரைவுத் தாக்குதல் ரோந்து கப்பல்களின் கட்டளை அதிகாரியாகவும், 4வது விரைவுத் தாக்குதல் படைப்பிரிவின் கட்டளை அதிகாரியாகவும், கப்பல்கள் மற்றும் நிறுவனங்களின் கட்டளை அதிகாரியாகவும் தனது கிட்டத்தட்ட 33 ஆண்டுகால சேவையில் பணியாற்றியுள்ளார். கடலோர காவல்படையின் பயிற்சி இயக்குநர், கடற்படை பணியாளர் இயக்குநர், வடமேற்கு கடற்படை கட்டளை துணைத் தளபதி, இலங்கை கடலோர காவல்படையின் துணை இயக்குநர் ஜெனரல் மற்றும் இயக்குநர் ஜெனரல் போன்ற முக்கிய பதவிகளை வகித்துள்ள இலங்கை கடற்படையின் புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரியாவார்.