வீரமரணம் அடைந்த போர்வீரர்களின் நினைவேந்தலின் அடையாளமாக கடற்படைச் சங்கத்தின் உறுப்பினர்கள் கடற்படைத் தளபதிக்கு பொப்பி மலரொன்று அணிவித்தனர்

போர் வீரர்களை நினைவுகூரும் வகையில் ஆரம்பிக்கப்பட்ட பொப்பி மலர் பிரச்சாரத்தையொட்டி, இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர், ரியர் அட்மிரல் மணில் மெண்டிஸ் (ஓய்வு) 2025 நவம்பர் 19 அன்று கடற்படைத் தலைமையகத்தில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொடவுக்கு பொப்பி மலரொன்று அணிவித்தார்.

முதலாம் மற்றும் இரண்டாம் உலகப் போரில் வீரமரணம் அடைந்த வீரர்களை நினைவு கூறும் வகையில் முதன்முறையாக ஆரம்பிக்கப்பட்ட இந்த பொப்பி மலர் கொண்டாட்டம் இன்று தாய் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த அனைத்து வீர வீரர்களையும் நினைவுகூரும் வகையில் கொண்டாடப்படுகிறது. அதன்படி, போரின் போது உயிர் தியாகம் செய்த அனைத்து கடற்படை வீரர்களையும் நினைவுகூரும் வகையில், இலங்கை கடற்படை சங்கத்தின் தலைவர் இன்று (2025 நவம்பர் 19) கடற்படைத் தளபதிக்கு கடற்படை தலைமையகத்தில் பொப்பி ஒன்றை அணிவித்தார்.

மேலும், இந்நிகழ்வில் ரியர் அட்மிரல் ரொஹான் அமரசிங்க (ஓய்வு) உட்பட பல உறுப்பினர்கள் குழுவும் கலந்துகொண்டனர்.