75 வது கடற்படை ஆண்டு நிறைவை முன்னிட்டு இரத்த தான நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டது

இலங்கை கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சமூக, சுற்றுச்சூழல் மற்றும் நெறிமுறை முயற்சிகளை உள்ளடக்கி மத, சுற்றுச்சூழல் மற்றும் சமூக நலத் திட்டங்களை கடற்படை நடத்தி வருகிறது.இதன் கீழ், கடற்படையின் மற்றொரு சமூக நலத் திட்டமாக ஏற்பாடு செய்யப்பட்ட இரத்த தான நிகழ்வானது 2025 டிசம்பர் 02, அன்று கொழும்பு கடற்படை பொது மருத்துவமனையிலும் வட மத்திய கடற்படை மருத்துவமனை வளாகத்திலும் நடைபெற்றது.

அதன்படி, கடற்படையின் 75 வது ஆண்டு நிறைவை முன்னிட்டும், தேசிய பேரிடர் சூழ்நிலையில் இரத்தத் தேவையைக் கருத்தில் கொண்டும் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த இரத்த தான நிகழ்வுகள், ராகம வட கொழும்பு போதனா மருத்துவமனை, அனுராதபுரம் போதனா மருத்துவமனை மற்றும் வவுனியா மாவட்ட மருத்துவமனை ஆகியவற்றின் இரத்த வங்கிகளுடன் ஒருங்கிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டன.

மேலும், மேற்கு கடற்படை கட்டளை மற்றும் வட மத்திய கடற்படை கட்டளையைச் சேர்ந்த ஏராளமான கடற்படை வீரர்கள் தாமாகவே முன்வந்து இந்த உன்னத சமூக நோக்கத்தை வெற்றிபெறச் செய்தனர்.