75வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படைக்கு ஆசிர்வாதம் பெறுவதற்காக அனுராதபுரத்தில் உள்ள சந்தஹிரு சேவையில் நடைபெற்ற ஒளி விழா

இலங்கை கடற்படையின் பெருமைமிக்க 75 வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில், அனுராதபுரம் சந்தஹிரு சேய வழிப்பாட்டுத் தளத்தில் ஒளிரச் செய்யும் ஒரு ஒளி விழா 2025 டிசம்பர் 09 ஆம் திகதி நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் 75 ஆண்டுகளுக்கும் மேலான நீண்ட பயணத்தில் தாய்நாட்டின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டைப் பாதுகாக்க தங்கள் உயிர்களைத் தியாகம் செய்த துணிச்சலான கடற்படை வீரர்களுக்கும், அனைத்து சேவை மற்றும் ஓய்வு பெற்ற கடற்படை வீரர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும் அஞ்சலி செலுத்தும் வகையில் இந்த மத நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டது.