கடும் வெள்ளம் காரணமாக பேராதனை கருப்பு பாலம் மற்றும் களுகமுவ பாலங்களில் சிக்கியுள்ள குப்பைகளை அகற்றும் நடவடிக்கைகளை கடற்படையினர் வெற்றிகரமாக முடிதனர்

"தித்வா" சூறாவளியின் காரணமாக ஏற்பட்ட சீரற்ற வானிலையினால், மகாவலி ஆற்றின் நீர்மட்டம் உயர்ந்தது, மேலும் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்ட பெரிய மரக்கட்டைகள் மற்றும் விறகுகள் உள்ளிட்ட குப்பைகள் பேராதெனியவில் உள்ள கலுபாலம் ரயில் பாலத்திலும், நில்லம்பவில் உள்ள கலுகமுவ பாலத்திலும் சிக்கி, அந்தப் பாலங்கள் வழியாக நீர் ஒழுங்காக வெளியேறுவதைத் தடுத்து, கடற்படை சுழியோடி உதவி மற்றும் அந்தப் பாலங்களை புணரமைக்க தொழில்நுட்ப உதவியை வழங்குவதற்காக ஆரம்பிக்கப்பட்ட சிறப்பு நடவடிக்கைகள் 2025 டிசம்பர் 14 மற்றும் 17 ஆகிய திகதிகளில் வெற்றிகரமாக நிறைவடைந்தன.

கடும் வெள்ளம் காரணமாக பேராதனை, கலுபாலம் ரயில் பாலத்தில் உள்ள தடைகளை அகற்றுவதற்காக கடற்படை 2025 டிசம்பர் 04 முதல் சிறப்பு கடற்படை சுழியோடி குழுவின் உதவியை வழங்கி வருகிறது. அதன்படி, இலங்கை ரயில்வே துறையின் உதவியுடன், கடற்படையின் சுழியோடி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவியுடன் சுமார் இரண்டு வாரங்கள் மேற்கொள்ளப்பட்ட தொடர்ச்சியான நடவடிக்கைக்குப் பிறகு, களுபாலம் பாலத்தில் சிக்கிய மரக்கட்டைகள் மற்றும் பெரிய மூங்கில் புதர்கள் உள்ளிட்ட குப்பைகள் மிகுந்த முயற்சியுடன் அகற்றப்பட்டன. இதனால் பாலத்தின் வழியாக தண்ணீர் தடையின்றி வெளியேறியதுடன், இதன் மூலம் இலங்கை ரயில்வே துறைக்கு தனது எதிர்கால பழுது மற்றும் பராமரிப்பு பணிகளை விரைவாக மேற்கொள்ள முடிந்தது.

மேலும், பேராதெனிய, நில்லம்ப பகுதியில் மகாவலி ஆற்றின் மீது உள்ள கலுகமுவ பாலத்தில் சிக்கியுள்ள மரக்கட்டைகள் உள்ளிட்ட குப்பைகள் காரணமாக, கெடம்பேயிலிருந்து நில்லம்ப வரையிலான நீரை தேசிய நீர் வழங்கல் வாரியத்தின் நீர் சுத்திகரிப்பு நிலையத்திற்கு கொண்டு செல்லும் பிரதான நீர் குழாய் இணைப்பு சேதமடையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. அதன்படி, பாலத்தில் உள்ள தடைகளை அகற்றுவதற்காக 2025 டிசம்பர் 11, அன்று தொடங்கப்பட்ட கடற்படையின் சிறப்பு சுழியோடி உதவி மற்றும் தொழில்நுட்ப உதவி நடவடிக்கை, 2025 டிசம்பர் 14, அன்று வெற்றிகரமாக முடிக்கப்பட்டு, அந்த பிரதான நீர்வழிப்பாதைக்கு சேதம் ஏற்படும் அபாயத்தை நீக்கியது.

மேலும், மோசமான வானிலை காரணமாக தீவில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்க இலங்கை கடற்படையால் தொடங்கப்பட்ட சிறப்பு மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண நடவடிக்கையின் கீழ், கடற்படை 2025 நவம்பர் 22 முதல் 2025 டிசம்பர் 18 வரையிலான காலகட்டத்தில் 1378 பேரை உயிருக்கு ஆபத்தான நிலையில் பாதுகாப்பாக மீட்டு 18301 பேரை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்துச் சென்று அவர்களுக்கு தேவையான நிவாரணங்களை வழங்கியுள்ளது. மேலும், பொது வாழ்க்கையை மீட்டெடுக்க கடற்படையால் தொடங்கப்பட்ட சிறப்புத் திட்டத்தின் கீழ், பொது இடங்கள், வீடுகள் மற்றும் குடிநீர் கிணறுகளை சுத்தம் செய்து, கடற்படையின் பங்களிப்புடன் இதுவரை (2025 டிசம்பர் 18,) 1025 குடிநீர் கிணறுகள், 104 பொது இடங்கள் மற்றும் 83 வீடுகள் சுத்தம் செய்யப்பட்டு ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், மேலும் கடற்படை இதற்கு தொடர்ந்து பங்களித்து வருகிறது.