கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் ஜனக குணசீல கடற்படையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் ஜனக குணசீல இன்று (2025 டிசம்பர் 18,) கடற்படை சேவையிலிருந்து ஓய்வு பெற்றார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையிலான கடற்படை மேலாண்மை வாரியம் மற்றும் தளபதிகளினால் இன்று தனது 55வது பிறந்தநாளைக் கொண்டாடும் ரியர் அட்மிரல் ஜனக குணசீலவுக்கு கடற்படைத் தலைமையகத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்த பின்னர், கடற்படை மரபுப்படி அவருக்கு சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டதுடன், சக அதிகாரிகளிடம் பிரியாவிடை பெற்று கடற்படை தலைமையகத்திலிருந்து கடற்படை வாகன அணிவகுப்பில் புறப்பட்ட ரியர் அட்மிரல் பிரதீப் ஜனக குணசீலவுக்கு சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட கடற்படையினர் கடற்படை மரபுப்படி மரியாதை செலுத்தினர்.

1990 ஆம் ஆண்டு ஜெனரல் சர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்பு பல்கலைக்கழகத்தின் 8வது ஆட்சேர்ப்பின் கேடட்டாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் ஜனக குணசீல, தனது 35 ஆண்டுகளுக்கும் மேலான சேவையில் பின்வரும் முக்கிய பதவிகளை வகித்துள்ளார்: கெப்டன், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை (வடக்கு), ஜெனரல் சர் ஜான் கொத்தலாவலா பாதுகாப்பு பல்கலைக்கழகத்தில் கணினி ஆய்வுகள் துறையின் தலைவர், கொமடோர், மின் மற்றும் மின்னணு பொறியியல் துறை (கிழக்கு), கொமடோர், கப்பல்துறை (கிழக்கு), கடற்படை மின் பயன்பாடுகள் மற்றும் உயிரியல் மருத்துவ பொறியியல் இயக்குனர், கடற்படை மின் ஏவுதல் மற்றும் ஆயுத பொறியியல் இயக்குனர், கடற்படை மின் மற்றும் தொலைத்தொடர்பு பொறியியல் இயக்குனர், பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு பிரிவின் இயக்குநர் ஜெனரல் மின் மற்றும் மின்னணு பொறியியல் ஆகியவற்றின் முன்னணி பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரி ஆவார்.