கடற்படை மரியாதைகளுடன் ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெறுகிறார்

இலங்கை கடற்படையில் 34 ஆண்டுகளுக்கும் மேலான சேவையை நிறைவு செய்த ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில இன்று (2025 ஆகஸ்ட் 23) கடற்படை சேவையில் இருந்து ஓய்வு பெற்றார்.

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட தலைமையிலான கடற்படை மேலாண்மை வாரியம், இன்று 55 வது பிறந்தநாளை முன்னிட்டு ரியர் அட்மிரல் ருவான் கலுபோவிலவுக்கு கடற்படைத் தலைமையகத்தில் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்த பின்னர் கடற்படை மரபுப்படி சிறப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதன் பிறகு, சக அதிகாரிகளுக்கு விடைகொத்த பிறகு, கடற்படை வாகன அணிவகுப்பு கடற்படைத் தலைமையகத்திலிருந்து புறப்படும்போது சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட மாலுமிகள் அணிவகுத்து நின்று கடற்படை மரபுப்படி ரியர் அட்மிரல் ருவான் கலுபோவிலவுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்தனர்.

1991 ஆம் ஆண்டு கடற்படை மற்றும் கடல்சார் அகாடமியின் 21 வது ஆட்சேர்ப்பின் மாணவச் சிப்பாய் அதிகாரியாக கடற்படையில் இணைந்த ரியர் அட்மிரல் ருவான் கலுபோவில, கடற்படை உணவு மற்றும் சீருடைகள் பிரதி இயக்குநர், கொமடோர் விநியோகம் மற்றும் சேவைகள் திணைக்களம் (கிழக்கு) கடற்படை வெளிநாட்டு கொள்முதல் துணை இயக்குநர், கடற்படை வழங்கல் மற்றும் சேவைகள் இயக்குநர், கடற்படைத் தளபதியின் செயலாளர் மற்றும் கடற்படையின் செயலாளர், விநியோகம் மற்றும் சேவைகள் இயக்குநர் ஜெனரல் மற்றும் பிரதி தலைமை அதிகாரி போன்ற முக்கிய பதவிகளை வகித்த ஒரு புகழ்பெற்ற சிரேஷ்ட அதிகாரி ஆவார்.