தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன கடமைகளை பொறுப்பேற்றார்

தெற்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன, 2025 டிசம்பர் 29, அன்று தெற்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக கடமைகளை பொறுப்பேற்றார்.

அதன்படி, கடற்படை மரபுப்படி தெற்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் தம்மிக்க விஜேவர்தன வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, தெற்கு கடற்படை கட்டளையின் தளபதியாக செயற்பட்ட ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை ஒப்படைத்தார்.