கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய கடமைகளை பொறுப்பேற்றார்
கிழக்கு கடற்படை கட்டளையின் புதிய தளபதியாக நியமிக்கப்பட்ட ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய, கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதியாக 2026 ஜனவரி 06 ஆம் திகதி கிழக்கு கடற்படை கட்டளை தலைமையகத்தில் கடமைகளைப் பொறுப்பேற்றார்.
கடற்படை மரபுப்படி கிழக்கு கடற்படை கட்டளைக்கு ரியர் அட்மிரல் கோசல வர்ணகுலசூரிய வரவேற்கப்பட்டதைத் தொடர்ந்து, கிழக்கு கடற்படை கட்டளைத் தளபதியாக இருந்த ரியர் அட்மிரல் ரவீந்திர திசேரா, கட்டளைத் தலைமையகத்தில் புதிய தளபதியிடம் தளபதியின் கடமைகளை கையளித்தார்.


