நாயாறு களப்பு வழியாக பொதுமக்களுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்கும் கடற்படையின் நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது

நிலவிய மோசமான வானிலை காரணமாக இடிந்து விழுந்த நாயாறு பாலத்தை சரிசெய்யும் வரை, அப்பகுதி மக்களுக்கு களப்பு வழியாக போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக கடற்படையால் 2025 நவம்பர் 29 அன்று தொடங்கப்பட்ட சிறப்பு படகு சேவை 2026 ஜனவரி 06 வெற்றிகரமாக நிறைவடைந்தது.

அதன்படி, நாயாறு முதல் நாயாறு குளம் வழியாக கோகிலாய் வரை போக்குவரத்து வசதிகளை வழங்க கடற்படை மேற்கொண்ட இந்த நடவடிக்கையின் கீழ், 2025 நவம்பர் 29 முதல் இன்றுவரை (2026 ஜனவரி 06) பதினேழாயிரத்து எண்ணூற்று அறுபது (17,860) நபர்களும், ஆயிரத்து தொள்ளாயிரத்து பன்னிரண்டு (1912) மோட்டார் சைக்கிள்களும் பாதுகாப்பாக கொண்டு செல்லப்பட்டதுடன், நாயாறு பாலத்தின் மறுசீரமைப்பு பணிகளுக்குப் பிறகு, இன்று (2026 ஜனவரி 06) இந்த நடவடிக்கை வெற்றிகரமாக நிறைவடைந்தது.