கடற்படையால் நிறுவப்பட்ட 1147 வது மீள் நீர் சுத்திகரிப்பு நிலையம் இப்போது பதுளை, ரிதீமாலியத்தையில் பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்டது

கடற்படையின் சமூக சேவை திட்டத்தின் கீழ், பதுளை மாவட்டத்தின் ரிதீமாலியத்தை பிரதேச செயலகப் பிரிவில் உள்ள கோலேயாய சமூக மண்டப வளாகத்தில் நிறுவப்பட்ட நீர் சுத்திகரிப்பு நிலையம் 2026 ஜனவரி 13 ஆம் திகதி திறந்து வைக்கப்பட்டது.

கடற்படையின் தொழில்நுட்ப மற்றும் கலைத்துவ உதவியுடன், சுகாதார அமைச்சின் தலைமையின் கீழ், ஜனாதிபதி செயலகத்தின் நிதி உதவியுடன் நிறுவப்பட்ட இந்த மீள் நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் மூலம், கடற்படை 1147 மீள் நீர் சுத்திகரிப்பு நிலையங்களை இயக்கியுள்ளதுடன், இவ்வாறு பொதுமக்களுக்காக கையளிக்கப்பட்ட இந்த நீர் சுத்திகரிப்பு நிலையம் மூலம், ரிதீமாலியத்தை பிரதேச செயலகப் பிரிவின் கோலேயாய பகுதியில் வசிக்கும் ஏராளமான மக்களின் சுத்தமான குடிநீர் தேவையை எளிதில் பூர்த்தி செய்ய முடியும்.

மேலும், சுத்தமான குடிநீரை வழங்கும் இந்த சமூக சேவைக்கு இலங்கை கடற்படை தொடர்ந்து பங்களிக்கும்.