இலங்கைக்கான ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதியை சந்தித்தார்

இலங்கையில் உள்ள ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகர் Colonel Amanda Johnston, வடக்கு கடற்படை கட்டளைத் தளபதி ரியர் அட்மிரல் புத்திக லியனகமகேவை வடக்கு கடற்படை கட்டளைத் தலைமையகத்தில் 2026 ஜனவரி 14 அன்று உத்தியோகப்பூர்வ சந்திப்பிற்காக சந்தித்தார்.

இந்த உத்தியோகபூர்வ சந்திப்பின் போது, ஆஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் பாதுகாப்பு ஆலோசகருக்கும் வடக்கு கடற்படை கட்டளைத் தளபதிக்கும் இடையே இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்கள் குறித்து ஒரு சுமுகமான கலந்துரையாடல் நடைபெற்றது, மேலும் இந்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினருக்கும் இடையே நினைவுப் பரிசு பரிமாற்றமும் நடைபெற்றது.