நேபாளத்தின் பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியைச் சேர்ந்த அதிகாரிகள் குழு கடற்படை தலைமையகத்திற்கு ஆய்வு சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்

இலங்கையில் படிப்புச் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் பணியாளர் பாடநெறியில் பயிலும் மாணவர் அதிகாரிகள் மற்றும் கல்வி ஊழியர்கள் அடங்கிய பிரிகேடியர் ஜெனரல் Purna Bahadur Khatri தலைமையிலான அதிகாரிகள் குழு 2026 ஜனவரி 19 ஆம் திகதி கடற்படை தலைமையகத்திற்கு வருகை தந்தது.

இந்த விஜயத்தின் போது, பிரிகேடியர் ஜெனரல் Purna Bahadur Khatri மற்றும் கடற்படைத் தலைமை அதிகாரி ரியர் அட்மிரல் டேமியன் பெர்னாண்டோ இடையே உத்தியோகப்பூர்வ சந்திப்பு நடைபெற்றதுடன், இருதரப்பு முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்த சுமுகமான கலந்துரையாடலுக்குப் பிறகு, குறித்த நிகழ்வைக் குறிக்கும் வகையில் இரு தரப்பினரும் நினைவுப் பரிசுகளைப் பரிமாறிக் கொண்டனர்.

மேலும், கடற்படைத் தலைமையக கேட்போர் கூடத்தில், நேபாள பாதுகாப்பு சேவைகள் கட்டளை மற்றும் பணியாளர் அகாடமியின் அதிகாரிகளுக்கு இலங்கை கடற்படையின் பங்கு குறித்து கடற்படையின் தலைமை அதிகாரி விளக்கினார்.