காலி கடற்கரையில் கடற்படையின் பங்களிப்புடன் கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம்

78வது சுதந்திர தின கொண்டாட்டங்களுடன் இணைந்து, காலியைச் சுற்றியுள்ள கடலோரப் பகுதியை மையமாகக் கொண்டு, இலங்கை கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கடற்கரை சுத்தம் செய்யும் திட்டம் 2026 ஜனவரி 31 ஆம் திகதி செயல்படுத்தப்பட்டது.

அதன்படி, தெற்கு கடற்படை கட்டளையின், இலங்கை கடற்படை கப்பல் தக்ஷினவின் கடற்படை நிறுவனத்தின் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கடற்கரை சுத்தம் செய்யும் திட்டத்தின் மூலம், சமுத்திர மாவத்தை முதல் காலி நகர எல்லை வரையிலான கடற்கரையில் இருந்து பிளாஸ்டிக் மற்றும் பொலிதீன் உள்ளிட்ட திடக்கழிவுகள் பெருமளவில் அகற்றப்பட்டன.

இலங்கை கடற்படைக் கப்பலான தக்ஷினவைச் சேர்ந்த கடற்படை வீரர்கள் குழு இந்த நிகழ்வில் பங்கேற்றனர்.