கடற்படைத் தளபதி, வடமேற்கு கடற்படைக் கட்டளையகத்தின் செயல்பாடுகள், நல்வாழ்வு மற்றும் விவசாயத் திட்டங்களைப் பார்வையிட்டார்

கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் கான்சன பானகொட, 2026 ஏப்ரல் 18 மற்றும் 19 ஆகிய திகதிகளில் வடமேற்கு கடற்படை கட்டளைக்கு உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு, இக் கட்டளையின் நிர்வாக, நலன் மற்றும் அபிவிருத்தி நடவடிக்கைகளைப் பார்வையிட்டதோடு, அச்செயல்பாடுகளை மேலும் திறமையாகவும் செயல்திறனுடனும் மேற்கொள்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழங்கினார்.

அதன்படி, வடமேற்கு கடற்படைக் கட்டளைத் தளபதியினால் கடற்படைத் தளபதி வரவேற்கப்பட்டதன் பின்னர், இலங்கை கடற்படைக் கப்பல்களான தம்பபண்ணி, விஜய, பரண மற்றும் தேரபுத்த ஆகியவற்றின் செயல்பாடுகள், நலன் மற்றும் திட்டங்கள் பார்வையிடப்பட்டு, இந்தச் செயல்பாடுகளைத் திறமையாகவும் செயல்திறனுடனும் மேலும் மேற்கொள்வதற்குத் தேவையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.

அந்த நிறுவனங்களின் கடற்படைப் பணியாளர்களிடம் உரையாற்றிய கடற்படைத் தளபதி, ஒழுக்கமான வாழ்க்கை முறையின் மூலம் கடற்படையின் பங்கை முறையாக நிறைவேற்றுவதன் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார்.