கடற்படை நடவடிக்கைகளுக்காகத் தகவல் தொடர்புத் திறன் மேம்பாட்டுப் பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது

இலங்கை கடற்படை அதிகாரிகளின் தகவல் தொடர்புத் திறன்களை மேம்படுத்தும் நோக்கத்தில், தெற்கு கட்டளைத் தளபதி, ரியர் அட்மிரல் தம்மிக விஜேவர்தன அவர்களின் தலைமையின் கீழ், கொழும்பு டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தால் 2026 மே 02 அன்று ஒரு சிறப்புப் பயிலரங்கம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

அமர்வுகள் மற்றும் செய்முறைப் பயிற்சிகள் மூலம், கடற்படை அதிகாரிகளின் ஆங்கிலப் பேச்சு மற்றும் பகுப்பாய்வுத் திறன்களை மேலும் மேம்படுத்துவதற்குத் தேவையான தகவல் தொடர்பு நுட்பங்கள் குறித்து அவர்களுக்குக் கற்பிக்க இந்தப் பயிலரங்கம் ஒரு வாய்ப்பை வழங்கியது. கடற்படைப் பேச்சு மன்றத்தின் தலைவர் உட்பட, தெற்கு கடற்படைக் கட்டளையகத்தைச் சிரேஷ்ட மற்றும் கனிஷ்ட அதிகாரிகள் இந்த அமர்வில் ஆர்வத்துடன் கலந்துகொண்டனர்.

இந்தப் பயிலரங்கின் முடிவில், கொழும்பு டோஸ்ட்மாஸ்டர்ஸ் கழகத்தின் சார்பாக தெற்கு கடற்படை கட்டளைத் தளபதியால் பங்கேற்ற பயிற்றுனர்களுக்கு நினைவுப் பரிசுகளும் வழங்கப்பட்டது.