‘IOS SAGAR’ எனப் பெயரிடப்பட்ட இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’ தீவிலிருந்து புறப்பட்டது
'நட்புறவின் பாலங்கள்' (Bridges of Friendship) என்ற கருப்பொருளுடன், ‘IOS SAGAR’ என்ற பெயரில் 2026 மே 15 அன்று தீவுக்கு வந்த இந்திய கடற்படைக் கப்பலான ‘INS SUNAYNA’, 2026 மே 18 ஆம் திகதி தீவிலிருந்து புறப்பட்டதுடன், மேலும் கொழும்புத் துறைமுகத்தில் நடைபெற்ற கடற்படை மரபுப்படி இலங்கை கடற்படை குறித்த கப்பலுக்கு பிரியாவிடை அளித்தது.
கப்பல் தீவில் தங்கியிருந்தபோது, இலங்கை கடற்படையின் தலைமைத் தளபதி, சர்வதேசப் பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருந்த கப்பல் குழுவினருடன் கருத்துப் பரிமாற்றத்தில் பங்கேற்றார். மேலும், ‘INS SUNAYNA’ கப்பலின் கட்டளை அதிகாரி, மேற்கு கடற்படைக் கட்டளையின் தளபதி மற்றும் கடற்படைக் கட்டளையின் கொடி அதிகாரி ஆகியோரும் உத்தியோகபூர்வ சந்திப்புகளை நடத்தினர்.
மேலும், இலங்கை கடற்படை வீரர்களுக்கு கப்பலைச் சுற்றிப் பார்க்கும் வாய்ப்பு கிடைத்ததுடன், பதினேழு (17) நாடுகளைச் சேர்ந்த கப்பல் குழுவினருடன் ஒரு நட்பு ரீதியான கைப்பந்து போட்டியும் நடத்தப்பட்டது. கப்பல் குழுவினர் தீவில் உள்ள பல கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த இடங்களையும் பார்வையிட்டனர்.
‘INS SUNAYNA’ கப்பல், இலங்கை கடற்படையுடன் இணைந்து (PASSEX) என்ற கூட்டு கடற்படைப் பயிற்சியில் பங்கேற்றது. அப்பயிற்சியின்போது, கடற்படை சமிக்ஞைப் பரிமாற்றம் மற்றும் நீர்வழிப் பயிற்சிகள் மூலம் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதை மையமாகக் கொண்டு பல்வேறு கடற்படைப் பயிற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. கடற்பகுதியில் உள்ள பொதுவான கடல்சார் சவால்களுக்கு ஒரு கூட்டு அணுகுமுறையுடன் பதிலளிப்பதற்கு இதுபோன்ற கடற்படைப் பயிற்சிகள் முக்கியமானவையாகும்.


