நிகழ்வு-செய்தி

71வது கடற்படை தினத்தை முன்னிட்டு கடற்படையினருக்கு ஆசீர்வாதமாக கொட்டாஞ்சேனை புனித லுசியா தேவாலயத்தில் தேவ வழிபாடுகள்

2021 டிசம்பர் 09 ஆம் திகதி நடைபெற உள்ள இலங்கை கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு மேற்கொள்ளப்படுகின்ற சமய நிகழ்ச்சிகள் தொடரில் கிறிஸ்தவ சமய வழிபாடுகள் 2021 நவம்பர் 23 அன்று கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதன்னவின் தலைமையில் கொழும்பு உதவி ஆயர், வண. கலாநிதி அன்டன் ரஞ்சித் தேரர் மற்றும் ஏனைய குருமார்களின் பங்களிப்புடன் கொழும்பு புனித லுசியா தேவாலயத்தில் இடம்பெற்றது.

24 Nov 2021

ஐக்கிய இராச்சியத்தின் நீர்வியல் அலுவலக பிரதிநிதிகள் கடற்படையின் தலைமை நீர்வியலாளருடன் சந்திப்பு

ஐக்கிய இராச்சிய நீர்வியல் அலுவலகத்தின் (United Kingdom Hydrographic Office - UKHO) மத்திய கிழக்கு மற்றும் ஆபிரிக்காவின் கூட்டாண்மை மற்றும் உறவின் தலைவர் திரு. திமோதி வில்லியம் லூவிஸ் தலைமையிலான ஐக்கிய இராச்சிய நீர்வியல் அலுவலகத்தின் (UKHO) குழுவொன்று 2021 நவம்பர் 22 ஆம் திகதி கடற்படையின் தலைமை அதிகாரி மற்றும் கூட்டுத் தலைமை நீர்வியலாளர் மற்றும் இலங்கை அரசாங்கத்தின் முதன்மை நீர்வியலாளரான வை.என் ஜயரத்னவை கடற்படை தலைமையகத்தில் சந்தித்தனர்.

23 Nov 2021

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் கடற்படைத் தளபதியை சந்தித்தார்

இலங்கைக்கான ஜேர்மன் தூதுவர் ஹொல்கர் சியுபட் (Holger Seubert) அவர்கள் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன அவர்களை இன்று (2021 நவம்பர் 23) கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

23 Nov 2021

வடக்கு தீவுகளுக்கான வடக்கு மாகாண புதிய ஆளுநரின் விஜயத்துக்கு கடற்படையின் உதவி

வடமாகாண ஆளுநராக புதிதாக நியமிக்கப்பட்டுள்ள கௌரவ. ஜீவன் தியாகராஜா அவர்கள் 2021 நவம்பர் மாதம் 20 ஆம் திகதி யாழ் மாவட்டத்தில் உள்ள தீவுகளை நேரில் சென்று பார்வையிட்டார். இதற்கான ஏற்பாடுகளை கடற்படையினர் மேற்கொண்டிருந்தனர்.

23 Nov 2021

சந்தஹிருசேய தூபி மகா சங்கத்தினரிடம் ஒப்படைப்பு

அநுராதபுரம் புனித நகரத்தில் நிர்மாணிக்கப்பட்ட சந்தஹிரு சேய தூபி மகா சங்கத்தினரிடம் ஒப்படைக்கும் நிகழ்வு அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் 2021 நவம்பர் 18 ஆம் திகதி மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில் நடைபெற்றதுடன் இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன மற்றும் கடற்படை சேவா வனிதா பிரிவின் தலைவி திருமதி சந்திமா உலுகேதென்ன ஆகியோர் கலந்துகொண்டனர்.

19 Nov 2021

உக்ரேனிய பாதுகாப்பு ஆலோசகர் கடற்படை தளபதியுடன் சந்திப்பு

உக்ரேனிய பாதுகாப்பு ஆலோசகர் கர்ணல் வோலோடயிமர் பகாய் (Volodymyr Bakai) இன்று (2021 நவம்பர் 16) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகெதென்னவை கடற்படைத் தலைமையகத்தில் சந்தித்தார்.

16 Nov 2021

போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் மற்றும் பொப்பி மலர் விழா -2021 விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இடம்பெற்றது

தாய்நாட்டிற்காக உயிர்நீத்த அனைத்து போர் வீரர்களும் நினைவுகூறும் போர்வீரர்கள் ஞாபகார்த்த தினம் மற்றும் பொப்பி மலர் விழாவின் -2021 பிரதான விழா கொழும்பு விஹார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டுள்ள படைவீர்கள் நினைவிடத்தில் இன்று ( 2021 நவம்பர்,14) நடைபெற்றதுடன் இந் விழாவில் பாதுகாப்பு செயலாளர் ஜெனரல் கமல் குணரத்ன பிரதம அதிதியாக கலந்து கொண்டார். மேலும் இந் நிகவுக்காக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

14 Nov 2021

கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு அனுராதபுரத்தில் கொடி ஆசீர்வாதம் பூஜை மற்றும் “கஞ்சுக” பூஜை நடைபெற்றது

2021 டிசம்பர் மாதம் 09 ஆம் திகதிக்கு ஈடுபட்டுள்ள இலங்கை கடற்படையின் 71 வது ஆண்டு நிறைவை முன்னிட்டு கஞ்சுக பூஜை மற்றும் கடற்படை கொடிகள் ஆசிர்வாதிக்கும் பூஜை இம்முறையும் ஏற்பாடு செய்யப்பட்டன. இந்த விழா 2021 நவம்பர் 11 மற்றும் இன்று (2021 நவம்பர் 12) கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவின் தலைமையில் ருவன்வேலி மஹா சேய மற்றும் ஜெய ஸ்ரீ மகா போதி ஆகிய இடங்களில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கடற்படை சேவா வனிதா பிரிவின் தளபதி திருமதி சந்திமா உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

12 Nov 2021

அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் தலைமையில் புதிய தேசிய பாதுகாப்பு அகாடமி திறந்து வைக்கப்பட்டுள்ளது

முப்படை, காவல்துறை மற்றும் அரசாங்க சேவையில் ஈடுபடுகின்ற மூத்த அதிகாரிகளுக்கு மூலோபாய சிந்தனையை ஊக்குவிக்கும் முதன்மையான நிறுவனமாக நிறுவப்பட்ட தேசிய பாதுகாப்பு கல்லூரி (National Defence College – NDC) இன்று (2021 நவம்பர் 11) அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களால் திறந்து வைக்கப்பட்டதுடன், இந்த நிகழ்வில் கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்னவும் கலந்து கொண்டார்.

11 Nov 2021

இந்தியாவில் நடைபெற்ற கோவா கடல்சார் மாநாட்டில் கழந்து கொண்ட கடற்படைத் தளபதி நாடு திரும்பினார்

மூன்றாவது முறையாக இந்திய கடற்படையால் ஏற்பாடு செய்யப்பட்ட கோவா கடல்சார் மாநாடு – 2021 (Goa Maritime Conclave – 2021) நவம்பர் 07 முதல் 09 ஆம் திகதி வரை இந்தியாவின் கோவா பிராந்தியத்தில் உள்ள இந்திய கடற்படை போர் பாடசாலையில் நடைபெற்றதுடன் இந் நிகழ்வில் இலங்கை கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் நிஷாந்த உலுகேதென்ன கலந்து கொண்டார்.

11 Nov 2021