நிகழ்வு-செய்தி

அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடர் 2020 வெற்றிகரமாக நிறைவு

இலங்கை பாய்மர படகுகள் சங்கத்தின் உதவியுடன் 2020 பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையால் நடத்தப்பட்ட அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடர் காலி முகத்திடம் கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்ததுடன் அங்கு கடற்படை பல வெற்றிகளைப் பெற்றுள்ளது.

01 Mar 2020

வருடாந்திர கடல் நீச்சல் போட்டித்தொடர் கடற்படை தளபதி தலைமையில் இடம்பெற்றது.

இலங்கை நீர் விளையாட்டு சங்கம் ஏற்பாடு செய்த 83 வது கடல் நீச்சல் போட்டித்தொடர் 2020 பிப்ரவரி 29 மற்றும் மார்ச் 1 ஆம் திகதிகளில் கல்கிசை கடற்கரையில் நடைபெற்றதுடன் பரிசு வழங்கும் விழாவின் பிரதம அதிதியாக கடற்படைத் தளபதி வைஸ் அட்மிரல் பியால் டி சில்வா கலந்து கொண்டார்.

01 Mar 2020

இலங்கை கடற்படை கப்பல்துறை தனது 35 வது ஆண்டு நிறைவு விழாவை பெருமையுடன் கொண்டாடியது

திருகோணமலை, கடற்படை கப்பல்துறை தனது 35 வது ஆண்டு நிறைவு விழாவை இன்று (2020 மார்ச் 01) நிருவனத்தின் கட்டளை அதிகாரி கேப்டன் ஹரித ஜயதேவ தலைமையில் பெருமையுடன் கொண்டாடியது.

01 Mar 2020

காலி நகரத்தில் சாலைகள் மற்றும் நடைபாதைகளை தூய்மைப்படுத்த கடற்படை பங்களிப்பு

பிவிதுரு தகுனக் - லஸ்ஸன ஹெடக், அதிமேதகு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ அவர்களின் செழிப்பு பார்வை முன் கொண்டு மேற்கொள்கின்ற சாலைகள் சுத்தம் செய்யும் வாரம் மற்றும் கடற்படை நீல பசுமை சுற்றுச்சூழல் போர் கருத்துக்கு இணையாக 2020 பிப்ரவரி 28, அன்று காலி பகுதியில் சாலைகள் மற்றும் நடைபாதை சுத்தம் செய்யும் திட்டமொன்று கடற்படையால் செயல்படுத்தப்பட்டது.

01 Mar 2020

மன்னார் மருத்துவமனையைச் சுற்றியுள்ள பகுதி தூய்மைப்படுத்த கடற்படை பங்களிப்பு

மன்னார் மருத்துவமனை சந்தியில் இருந்து எலுவதூர் சந்தி வரை செல்லும் சாலையின் இப்பகுதியை சுத்தம் செய்ய இலங்கை கடற்படை 2020 பிப்ரவரி 29, அன்று பங்கழிப்பு வழங்கியது.

01 Mar 2020

ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒரு நபர் கைதுசெய்ய கடற்படை ஆதரவு

கடற்படை மற்றும் காவல்துறை இனைந்து 2020 பிப்ரவரி 29 ஆம் திகதி புத்தலம் பகுதியில் மேற்கொண்டுள்ள கூட்டு சோதனை நடவடிக்கையின் போது ஐஸ் (Methamphetamine) போதைப்பொருளுடன் ஒரு நபர் (01) கைது செய்யப்பட்டார்.

01 Mar 2020

2020 அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடரின் முதல் நாள் வெற்றிகரமாக நிறைவடைந்தது

இலங்கை கடற்படை இலங்கை பாய்மர படகுகள் சங்கத்தின் உதவியுடன் தொடங்கிய 2020 அட்மிரல் கிளான்சி பெர்னாண்டோ ஞாபகார்த்த கடற்படை கோப்பை படகோட்டப் போட்டித்தொடரின் முதல் நாள் இன்று (2020 பிப்ரவரி 29,) காலி முகத்திடம் கடற்கரையில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.

29 Feb 2020

சுமார் 140 கிலோ மற்றும் 300 கிராம் போதைப்பொருள் கடற்படை உதவியால் கைது

இலங்கை கடற்படை மற்றும் பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகம் இனைந்து காலி கடல் பகுதியில் சுமார் 140 கிலோ மற்றும் 300 கிராம் போதைப்பொருளுடன் 6 சந்தேக நபர்களை இன்று (2020 பிப்ரவரி 29) கைது செய்துள்ளனர்.

29 Feb 2020

டயலொக் ரக்பி லீக் போட்டித்தொடரில் கடற்படை மற்றொரு வெற்றியைப் பதிவு செய்தது

2020 பிப்ரவரி 28 ஆம் திகதி இரத்மலான விமானப்படை ரக்பி மைதானத்தில் இடம்பெற்ற டயலொக் ரக்பி லீக் போட்டித்தொடரில் மற்றொரு போட்டியின் விமானப்படை அணியை 21 புள்ளிகளுக்கு 24 புள்ளிகளாக வீழ்த்தி கடற்படை அணி ஒரு விரிவான வெற்றியைப் பெற்றது.

29 Feb 2020

Table Top பயிற்சி 2020 திருகோணமலையில் நடைபெற்றது

ஒத்துழைப்பு மூலம் தீங்கு விளைவிக்கும் கருப்பொருளின் கீழ் நான்காவது துரித தாக்குதல் ரோந்து படகுகள் குழுவினால் ஏற்பாடு செய்த வருடாந்திர Table Top பயிற்சி, திருகோணமலை கடற்படைத் தளத்தில் இம்மாதம் 27 மற்றும் 28 ஆம் திகதிகளில் இடம்பெற்றதுடன் கிழக்கு கடற்படை கட்டளையின் தளபதி ரியர் அட்மிரல் ருவன் பெரேரா பிரதம அதிதயாக கலந்து கொண்டார்.

28 Feb 2020