சட்டவிரோத மீன்பிடியை தடுப்பதற்காக கடற்படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் 06 பேர் கைப்பற்றப்பட்டனர்
இலங்கை கடற்படை 2025 அக்டோபர் 21 முதல் 24 வரை உள்ளூர் கடல் பகுதியில் மேற்கொண்ட நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள் மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட ஆறு (06) நபர்களுடன் நான்கு (04) டிங்கி படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, கிழக்கு கடற்படை கட்டளையால் திருகோணமலையின் பிளாக் பாயிண்ட், கோகிலாய் மற்றும் இறக்கண்டி கடற்கரைகள் மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளிலும், வடக்கு கடற்படை கட்டளையால் யாழ்ப்பாணத்தின் கட்டைக்காடு கடற்கரை மற்றும் கடல் பகுதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளிலும் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நபர்களுடன் மீன்பிடி படகுகளும் கைப்பற்றப்பட்டன.
மேலும், இந்த நடவடிக்கைகளின் போது கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர்கள், தடைசெய்யப்பட்ட மீன்பிடி உபகரணங்கள் மற்றும் மீன்பிடி படகுகள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக திருகோணமலை, முல்லைத்தீவு, குச்சவெளி மற்றும் யாழ்ப்பாணத்தில் உள்ள மீன்வள ஆய்வாளர் அலுவலகங்களுக்கு ஒப்படைக்கப்பட்டன.






