புத்தளம் பகுதியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட விவசாய இரசாயனங்களுடன் ஒரு சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளார்
இலங்கை கடற்படையினர், 2025 ஆகஸ்ட் 19 ஆம் திகதி இரவு புத்தளம் எத்தாலை பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் விவசாய இரசாயனங்களை கொண்டு சென்ற ஒரு லொரியுடன் (01) சந்தேக நபர் (01) ஒருவரையும் கடற்படையினர் கைப்பற்றினர்.
அதன்படி, 2025 ஆகஸ்ட் 19 ஆம் திகதி புத்தளம் எத்தாலை பகுதியில் வடமேற்கு கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல் விஜய நடத்திய இந்த தேடுதல் நடவடிக்கையின் போது, சந்தேகத்திற்கிடமான லொரி ஒன்றைக் கண்காணித்து சோதனை செய்தனர். அப்போது, சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் பூச்சிக்கொல்லிகள் மற்றும் களைக்கொல்லிகள் உள்ளிட்ட விவசாய இரசாயனங்கள் அடங்கிய ஒரு லொரியுடன், ஒரு (01) சந்தேக நபர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்.
மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட சந்தேக நபர் தலவில பகுதியைச் சேர்ந்த 41 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டதுடன், சந்தேக நபர், விவசாய இரசாயனப் பொருட்கள் மற்றும் லொரி ஆகியவை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கற்பிட்டி பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.