மன்னாரில் 115 வாட்டர் ஜெல் வணிக வெடிபொருட்களுடன் சந்தேக நபர் ஒருவர் கைது

மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடி படையுடன் இணைந்து, இலங்கை கடற்படை, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் 2025 டிசம்பர் 31 அன்று ஒரு சிறப்பு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டதுடன். வெடிபொருட்களைப் பயன்படுத்தி சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக, வாட்டர் ஜெல் எனப்படும் நூற்று பதினைந்து (115) வணிக வெடிபொருட்களுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

அதன்படி, வடமத்திய கடற்படை கட்டளையின் இலங்கை கடற்படை கப்பல்கள் கஜபா மற்றும் புஸ்சதேவ நிறுவனங்கள், மன்னார் பொலிஸ் சிறப்பு அதிரடிப் படையினருடன் இணைந்து நடத்திய இந்த சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, மன்னார் பள்ளிமுனை பிரதேசத்தில் சந்தேகத்திற்கிடமான ஒரு வீட்டை சோதனை செய்தனர். அங்கு, சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளுக்காக வைத்திருந்த நூற்று பதினைந்து (115) வாட்டர் ஜெல் வணிக வெடிபொருட்களுடன் ஒரு (01) சந்தேக நபர் கைது செய்யப்பட்டார்.

மேலும், இந்த நடவடிக்கையின் மூலம் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் மன்னார், பள்ளிமுனையைச் சேர்ந்த 45 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், சந்தேக நபர் மற்றும் வாட்டர் ஜெல் எனப்படும் நூற்று பதினைந்து (115) வணிக வெடிபொருட்கள் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக மன்னார் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டன.