நடவடிக்கை செய்தி

11 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

இலங்கை கடற்படையினர், யாழ்ப்பாணம் மாமுனை பகுதியில் இன்று (2023 ஜூலை 19) நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது முப்பத்தைந்து (35) கிலோகிராமுக்கு மேற்பட்ட கேரள கஞ்சாவை கைப்பற்றினர்.

19 Jul 2023

557 கிலோ கிராமுக்கு அதிகமான பீடி இலைகளை ஏற்றிச் சென்ற 02 டிங்கி படகுகள் நீர்கொழும்பு களப்பு பகுதியில் வைத்து கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை மாதம் 18 ஆம் திகதி நீர்கொழும்பு களப்பு பகுதியில் மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த களப்பு பகுதியூடாக சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் சுமார் ஐநூற்று ஐம்பத்தேழு (557) கிலோகிராம் பீடி இலைகளை ஏற்றிச் சென்ற இரண்டு (02) டிங்கி படகுகள் கைப்பற்றினர்.

19 Jul 2023

வடக்கு கடற்பரப்பில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 16 பேர் கடற்படையினரால் கைது

யாழ்ப்பாணம் கடைக்காடு, நகர்கோவில் மற்றும் சுண்டிக்குளம் கடற்பரப்பில் 2023 ஜூலை 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட நடவடிக்கைகளின் போது செல்லுபடியாகும் அனுமதிப்பத்திரம் இன்றி இரவில் சுழியோடி நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் தடைசெய்யப்பட்ட வலைகள் மற்றும் சட்டவிரோத ஒளி நீரோட்டங்களைப் பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபட்ட 16 மீனவர்கள், நான்கு (04) டிங்கி படகுகள், சுழியோடி உபகரணங்கள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கைது செய்யப்பட்டன.

18 Jul 2023

சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கொண்டு வரப்பட்ட பீடி இலைகளை ஏற்றிச் சென்ற டிங்கி படகு ஒன்றுடன் 02 சந்தேகநபர்கள் கடற்படையினரால் கைது

கல்பிட்டி, பெரிய அரிச்சால் தீவுகளுக்கு அப்பாற்பட்ட கடல் பகுதியில் 2023 ஜூலை மாதம் 14 ஆம் திகதி இரவு இலங்கை கடற்படையினர் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த கடல் பகுதிவூடாக சட்டவிரோதமான முறையில் கொண்டு வரப்பட்ட சுமார் ஐநூற்று முப்பது (530) கிலோகிராம் பீடி இலைகள் கொண்ட (ஈரமான எடை) (01) டிங்கி படகொன்றுடன் இரண்டு சந்தேக நபர்கள் (02) கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர்.

15 Jul 2023

யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மற்றும் அரியாலை பகுதிகளில் 65 வர்த்தக வெடிபொருட்கள் குச்சிகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன

இலங்கை கடற்படையினர் 2023 ஜூலை மாதம் 04 மற்றும் 05 ஆம் திகதிகளில் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை மற்றும் அரியாலை பகுதிகளில் மேற்கொண்ட விசேட தேடுதல் நடவடிக்கைகளில் போது ஊர்காவற்துறை அல்லப்பிட்டி களப்பு பகுதியில் மற்றும் அரியாலை மணியந்தோட்டம் கடற்கரை பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த பதினெட்டு மின்சாரம் அல்லாத டெட்டனேட்டர்கள், 65 வணிக வெடிபொருட்கள் மற்றும் 155 செ.மீ நீளமுள்ள பாதுகாப்பு உருகிகள் கைப்பற்றப்பட்டது.

06 Jul 2023

சட்டவிரோதமான முறையில் கொண்டுவரப்பட்ட 1947 கிலோ கிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினர் புத்தளம், கரதீவு கடற்கரைப் பகுதியில் இன்று (2023 ஜூலை 02) அதிகாலை மேற்கொண்டுள்ள சிறப்பு நடவடிக்கையின் போது குறித்த கடற்கரைப் பகுதிக்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட ஆயிரத்து தொள்ளாயிரத்து நாற்பத்தேழு (1947) கிலோகிராம் பீடி இலைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் (01) கைது செய்யப்பட்டுள்ளார்.

02 Jul 2023

சுமார் 30 மில்லியன் ரூபா பெறுமதியான கேரள கஞ்சா மன்னாரில் வைத்து கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளது

மன்னார், இலுப்புக்கடவாய் களப்பு பகுதியில் 2023 ஜூன் 30 ஆம் திகதி இலங்கை கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது 92 கிலோகிராமிற்கும் அதிகமான (92) கேரள கஞ்சா கைப்பற்றப்பட்டது.

01 Jul 2023

கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 18 மில்லியன் ரூபாவுக்கும் மேல் பெறுமதியான ஹெரோயின் போதைப்பொருளுடன் 08 சந்தேகநபர்கள் கைது

இலங்கைக்கு தெற்கு தெவுந்தர பகுதியில் இருந்து சுமார் 573 கடல் மைல் தொலைவில் (சுமார் 1061 கிமீ) மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின் மூலம் 900 கிராம் ஹெராயின் போதைப்பொருள் மற்றும் 08 சந்தேக நபர்களுடன் வெளிநாட்டு இழுவை படகொன்று 2023 ஜூன் 22 ஆம் திகதி இலங்கை கடற்படை கப்பல் சயுரவின் கடற்படையினரால் கைது செய்யப்பட்டதுடன் இழுவை படகும் சந்தேக நபர்களும் 2023 ஜூன் 28 ஆம் திகதி காலை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.

29 Jun 2023

கேரள கஞ்சாவுடன் இரு சந்தேகநபர்கள் தம்பலகமுவ பகுதியில் கைது

திருகோணமலை, தம்பலகமுவ, மீரா நகர் பகுதியில் 2023 ஜூன் 26 ஆம் திகதி இலங்கை கடற்படையினர் பொலிஸ் விசேட அதிரடிப்படையினருடன் இனைந்து நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின் போது குறித்த பகுதியில் ஒரு வீட்டில் விற்பனைக்காக தயார் செய்யப்பட்ட சுமார் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவுடன் இரண்டு சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.

27 Jun 2023

Pregabalin Capsules 150 mg வகையின் மருந்து அட்டைகளுடன் சந்தேகநபர் ஒருவர் கல்பிட்டியில் கடற்படையினரால் கைது

இலங்கை கடற்படையினரால் 2023 ஜூன் 24 ஆம் திகதி நடத்தப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக விற்பனை செய்ய வேனில் கொண்டு செல்லப்பட்ட நாற்பத்தி இரண்டாயிரத்து முன்னூறு (42300) Pregabalin Capsules 150 mg மருந்து அட்டைகளுடன் சந்தேகநபர் (01) ஒருவர் கல்பிட்டி, கரம்ப வீதித் தடைக்கு அருகில் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

25 Jun 2023