நடவடிக்கை செய்தி
மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சீரற்ற காலநிலை காரணமாக வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களுக்கு நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த நிவாரணக் குழுக்கள்; கொழும்பு, களுத்துறை, இரத்தினபுரி, காலி மற்றும் மாத்தறை ஆகிய மாவட்டங்களில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காகவும் அவர்களின் அன்றாட தேவைகளுக்காகவும் படகுகள் மூலம் போக்குவரத்து வசதிகள் மற்றும் அனர்த்த நிவாரணங்களை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்கின்றன.
03 Jun 2024
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் தொடர்ந்து நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்

சீரற்ற காலநிலையைக் கருத்தில் கொண்டு மேற்கு, தெற்கு மற்றும் சப்ரகமுவ மாகாணங்களில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக நியமிக்கப்பட்டுள்ள கடற்படையின் அனர்த்த மீட்புக் குழுவினர், பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக மீட்பதற்காக சிறிய படகுகள் மூலம் தொடர்ந்தும் அனர்த்த நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
02 Jun 2024
தென் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய நிலையில் மீட்கப்பட்ட 06 மீனவர்களும் கடற்படையினரால் கரைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்

இலங்கைக்கு தெற்கே தேவுந்தர முனையில் இருந்து சுமார் 480 கடல் மைல் (சுமார் 889 கிமீ) தொலைவில் உள்ள ஆழ் கடற்பரப்பில் ஆபத்தில் சிக்கிய நிலையில் கொழும்பு கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்புடன் வெளிநாட்டுக் கப்பலொன்று மூலம் மீட்கப்பட்ட பல நாள் மீன்பிடிப் படகொன்றில் இருந்த 06 இலங்கை மீனவர்களும் இன்று (2024 ஜூன் 02) கடற்படையினரால் காலி துறைமுகத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளது.
02 Jun 2024
மோசமான வானிலையை எதிர்கொண்டு மக்களுக்கு நிவாரணம் வழங்க கடற்படையின் நிவாரண குழுக்கள் தயார் நிலையில்

மோசமான காலநிலையினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 ஜூன் மாதம் 01 ஆம் திகதி, களுத்துறை மாவட்டத்தின் புலத்சிங்கல, புவக்பிட்டிய, பாலிந்தநுவர மற்றும் காலி மாவட்டத்தின் வெலிபன்ன, அக்குரஸ்ஸ மற்றும் பாணடுகம ஆகிய இடங்களுக்கு கடற்படையின் அனர்த்த நிவாரண குழுக்களை அனுப்பியுள்ளனர். தற்போது குறித்த நிவாரணக் குழுக்கள் நிவாரண நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
02 Jun 2024
காலி தொடம்கொட பாலத்தில் சிக்கியுள்ள கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது

காலி, பத்தேகம பிரதேசத்தில், கிங் ஆற்றின் குறுக்கே நிர்மாணிக்கப்பட்ட தொடம்கொட பாலத்தில் கடும் மழை காரணமாக சிக்கிய கழிவுகளை அகற்றும் நடவடிக்கையொன்று 2024 மே மாதம் 27 ஆம் திகதி கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்டது.
28 May 2024
மோசமான காலநிலையினால் மாதம்பே கடுப்பிட்டி ஓயா நிரம்பி வழிந்து பாதிக்கப்பட்ட மக்களுக்கு கடற்படையினர் நிவாரணம் வழங்கியுள்ளனர்.

நாடு முழுவதும் அண்மையில் பெய்த கடும் மழை காரணமாக புத்தளம், மாதம்பே, கடுப்பிட்டி ஓய நிரம்பி வழிவதால் ஹேனபொல பிரதேசம் வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. குறித்த வெள்ளப்பெருக்கினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்காக 2024 மே மாதம் 26 ஆம் திகதி கடற்படையின் நிவாரணக் குழுவொன்று நியமிக்கப்பட்டதுடன் தற்போது மீட்பு குழுவினர் அப்பகுதி மக்களுக்கு நிவாரண பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
27 May 2024
மோசமான காலநிலை காரணமாக முந்தலம பிரதேசத்தில் வெள்ளத்தில் சிக்கிய 03 பேரை கடற்படையினர் மீட்டுள்ளனர்

நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையைத் தொடர்ந்து புத்தளம் பெரியகடவலை பிரதேசத்தில் ஏற்பட்ட சிறு வெள்ளத்தில் இருந்து மூன்று பேர் கொண்ட குடும்பத்தை காப்பாற்றும் நடவடிக்கையில் இலங்கை கடற்படையினர் இன்று (2024 மே 20) ஈடுபட்டுள்ளனர்.
20 May 2024
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவர முற்பட்ட 338 கிலோ பீடி இலைகள் வடமேற்கு கடற்பரப்பில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

இலங்கை கடற்படையினர் 2024 ஆம் ஆண்டு மே மாதம் 15 ஆம் திகதி கல்பிட்டி இப்பண்தீவ் கடற்பகுதியில் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கையில் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டு வர முயன்ற சுமார் முந்நூற்று முப்பத்தெட்டு (338) கிலோகிராம் பீடி இலைகளை (ஈரமான எடையுடன்) கைப்பற்றினர்.
17 May 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 08 பேர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்

இலங்கை கடற்படை; 2024 ஆம் ஆண்டு மே மாதம் 16 ஆம் திகதி முல்லைத்தீவு, அம்பலன்பொக்கனே கடற்பரப்பிலும், திருகோணமலை பொடுவகட்டு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளின் விளைவாக சட்ட விரோதமாக மின் விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்ட மற்றும் சட்டவிரோத வலைகளை பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொண்டு மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட எட்டு (08) நபர்களுடன் மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
17 May 2024
சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட 29 பேர் கடற்படையினரின் கட்டுப்பாட்டில் உள்ளனர்

இலங்கை கடற்படை; 2024 மே மாதம் 15ம் திகதி அன்று கிளிநொச்சி, சுண்டிக்குளம் மற்றும் கூடாரப்பு கடற்பகுதிகளிலும், மன்னார் தால்பாடு கடற்பரப்பிலும் மேற்கொள்ளப்பட்ட தேடுதல் நடவடிக்கைகளில் சட்டவிரோதமான வலைகளை பயன்படுத்தி சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகள், மின்சார விளக்குகளை பயன்படுத்தி மீன்பிடித்தல், வணிக வெடிமருந்துகளைப் பயன்படுத்தி இரவு சுழயோடல் மற்றும் மீன்பிடியில் ஈடுபட்ட இருபத்தொன்பது (29) நபர்களுடன், பதினொரு (11) டிங்கிகள், இருநூற்று பத்து (210) கடலட்டைகளும் , சட்டவிரோத மீன்பிடி சாதனங்கள் மற்றும் சுழயோடல் உபகரணங்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.
16 May 2024