நடவடிக்கை செய்தி

மன்னார் தெற்கு கடலில் இரவு நேரத்தில் சுழியோடி கடல் அட்டைகளை சட்டவிரோதமாக மீன்பிடித்த 04 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், மன்னாரின் தெற்கு கடல் பகுதியில் 2026 மார்ச் 04 ஆம் திகதி காலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக இரவு நேர சுழியோடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட நான்கு (04) நபர்களையும், நானூற்று முப்பத்தேழு (437) கடல் அட்டைகளுடன், ஒரு (01) டிங்கி படகையும் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

06 Mar 2026

சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளைத் தடுக்கும் நடவடிக்கைகளில் கடற்படையினரால் 19 பேர் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், 2026 பிப்ரவரி 16 முதல் 28 வரை உள்ளூர் கடல் பகுதிகளை உள்ளடக்கிய நடவடிக்கைகளின் போது, தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகள், வெடிபொருட்கள், உரிமம் இல்லாமல் சுழியோடி மற்றும் சட்டவிரோத முறைகளைப் பயன்படுத்தி மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்ட பத்தொன்பது (19) நபர்கள், இரண்டு (02) டிங்கிகள், மூன்று (03) படகுகள் மற்றும் ஏழு (07) படகுகளை கடற்படையினர் கைப்பற்றினர்.

06 Mar 2026

சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட 360 கிலோகிராம் பீடி இலைகள் நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன

2026 பிப்ரவரி 26 ஆம் திகதி நீர்கொழும்பு பிடிபன கடல் பகுதியில் இலங்கை கடற்படை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, சட்டவிரோதமாக கடத்தப்பட்ட சுமார் முந்நூற்று அறுபது (360) கிலோகிராம் பீடி இலைகள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டன.

03 Mar 2026

கல்பிட்டியில் சட்டவிரோதமாக இறக்குமதி செய்யப்பட்ட 882 கிலோகிராம் பீடி இலைகளை கடற்படையினர் கைப்பற்றினர்

இலங்கை கடற்படை, 2026 பிப்ரவரி 25 ஆம் திகதி கல்பிட்டியின் ஆனவாசல் மற்றும் முகத்துவாரம் பகுதிகளில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கைகளின் மூலம், சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்டு போக்குவரத்துக்காக தயார் செய்யப்பட்டு, ஒரு புதரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சுமார் எண்ணூற்று எண்பத்தி இரண்டு (882) கிலோகிராம் பீடி இலைகளுடன் கெப் வண்டி ஒன்றையும் (01) கடற்படையினர் கைப்பற்றினர்.

27 Feb 2026

கற்பிட்டி முகத்துவாரம் கடற்பரப்பில் 685 கிலோகிராம் கடல் அட்டைகளை சட்டவிரோதமாக கொண்டு சென்ற சந்தேக நபர் ஒருவர் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டார்

இலங்கை கடற்படை, 2026 பிப்ரவரி 23 ஆம் திகதி கற்பிட்டி முகத்துவாரம் கடல் பகுதியில் நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், கடல் வழியாக சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்ட அறுநூற்று எண்பத்தைந்து (685) கிலோகிராம் உலர்ந்த கடல் அட்டைகள், ஒரு (01) சந்தேக நபர் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவை கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது.

24 Feb 2026

தெற்கு கடலில் நோய்வாய்ப்பட்ட நிலையில் இருந்த மீனவரை சிகிச்சைக்காக கரைக்கு கொண்டு வர கடற்படையினர் உதவினர்

இலங்கையின் தெற்கு கடற்கரையில் ஆழ்கடலில் உள்ளூர் பல நாள் மீன்பிடி படகில் நோய்வாய்ப்பட்ட மீனவர் ஒருவரை, கொழும்பில் உள்ள கடல்சார் தேடல் மற்றும் மீட்பு ஒருங்கிணைப்பு மையத்தின் ஒருங்கிணைப்பின் கீழ் அவசரமாக கரைக்கு கொண்டு வரப்பட்டு, இன்று (2026 பிப்ரவரி 24) காலை கடற்படையினரால் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராப்பிட்டிய போதனா வைத்தியசாலைக்கு அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது.

24 Feb 2026

சட்டவிரோதமாக நாட்டிற்கு கொண்டு வரப்பட்ட பீடி இலைகள், வெளிநாட்டு சிகரெட்டுகள் மற்றும் பூச்சிக்கொல்லிகளுடன் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்

இலங்கை கடற்படை, கடலோர காவல்படை திணைக்களத்துடன் இணைந்து, 2026 பிப்ரவரி 21 ஆம் திகதி சிலாபம் மற்றும் தொடுவாவ கடல் பகுதிகளில் ஒரு சிறப்பு கூட்டு தேடுதல் நடவடிக்கையை மேற்கொண்டது. இதன் போது சட்டவிரோதமாக கொண்டு செல்லப்பட்டு கொண்டிருந்த மற்றும் நாட்டிற்கு சட்டவிரோதமாக கொண்டு வரப்பட்ட தொள்ளாயிரத்து தொன்னூற்று இரண்டு (992) கிலோகிராமை விட அதிகமான பீடி இலைகள், ஒரு லட்சத்து நாற்பதாயிரம் (140,000) வெளிநாட்டு சிகரெட்டுகள், ஒரு தொகை பூச்சிக்கொல்லிகள், இரண்டு (02) சந்தேக நபர்கள் மற்றும் ஒரு (01) டிங்கி படகு ஆகியவை கைப்பற்றப்பட்டன.

24 Feb 2026

மன்னார் கடற்பரப்பில் சட்டவிரோதமாக மீன்பிடித்ததற்காக இந்திய மீன்பிடி படகு ஒன்று கடற்படையினரால் கைப்பற்றப்பட்டது

இலங்கை கடற்படை, மன்னாருக்கு தெற்கே இலங்கை கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 22 ஆம் திகதி இரவு நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் போது, உள்ளூர் கடல் பகுதியில் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக ஒரு (01) இந்திய மீன்பிடி படகு மற்றும் பன்னிரண்டு (12) இந்திய மீனவர்களைக் கடற்படையினர் கைப்பற்றினர்.

24 Feb 2026

கிளிநொச்சி, இரணைதீவு மேற்கு கடற்பரப்பில் இரவில் சட்டவிரோதமாக சுழியோடி, கடல் அட்டை பிடியில் ஈடுபட்ட 10 சந்தேக நபர்கள் கடற்படையினரால் கைப்பற்றப்பட்டனர்

இலங்கை கடற்படையினர், கிளிநொச்சியின் இரணைதீவு மேற்கு கடல் பகுதியில் 2026 பிப்ரவரி 23 ஆம் திகதி அதிகாலை நடத்திய சிறப்பு தேடுதல் நடவடிக்கையின் மூலம், சட்டவிரோதமாக இரவு நேரத்தில் சுழியோடி, கடல் அட்டை பிடியில் ஈடுபட்ட பத்து (10) நபர்களையும், ஆயிரத்து இருநூற்று முப்பத்திரண்டு (1232) கடல் அட்டைகள், மூன்று (03) டிங்கி படகுகள் மற்றும் சுழியோடி உபகரணங்களையும் கடற்படையினர் கைப்பற்றினர்.

23 Feb 2026

புத்தளம், சாலியவெவ பகுதியில் 02 கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சாவுடன் சந்தேக நபரொருவர் கைது

இலங்கை கடற்படை, மன்னார் குற்றப் புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து, 2026 பிப்ரவரி 22 ஆம் திகதி புத்தளம் சாலியவெவ பகுதியில் நடத்தப்பட்ட சிறப்பு சோதனை நடவடிக்கையின் போது சுமார் இரண்டு (02) கிலோகிராம் வெளிநாட்டு கஞ்சா, ஒரு (01) சந்தேக நபர் மற்றும் ஒரு (01) மோட்டார் சைக்கிள் ஆகியவை கைப்பற்றப்பட்டது.

23 Feb 2026